7வது சம்பள கமிஷன் அகவிலைப்படி உயர்வு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. அவர்களுக்கு விரைவில் அரசிடம் இருந்து நல்ல செய்தி வர உள்ளது. ஊழியர்களுக்கான இந்த செய்தி அகவிலைப்படி உயர்வு தொடர்பானது. செப்டெம்பர் மாதத்தில் அகவிலைப்படி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இம்முறை அகவிலைப்படி 3 அல்லது 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு டிஏ தற்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து 45 அல்லது 46 சதவீதமாக உயரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

AICPI குறியீட்டின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை முடிவு செய்யப்படும்


ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாக சமீபத்தில், பிடிஐ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) விகிதம் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படும் AICPI குறியீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.


3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


ஜூலை 31 அன்று தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஜூன் CPI-IW புள்ளிவிவரங்கள் 3 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளன. தசம புள்ளி அரசாங்கத்தால் கருதப்படுவதில்லை. இம்முறை அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த கோரிக்கை விடுக்கப்படுவதாக அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சிவகோபால் மிஸ்ராவும் தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கம் அதை 3 சதவீதம் உயர்த்தி 45 சதவீதம் வரை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


4 சதவிகித அதிகரிப்பு சாத்தியம்


அகவிலைப்படி (DA) என்பது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) மாதாந்திர எண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஜூலை 2023 முதல் பொருந்தும் அகவிலைப்படியின் எண்ணிக்கை ஜனவரி முதல் ஜூன் வரை AICPI குறியீட்டால் தீர்மானிக்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்கான எண்களின் போக்கைப் பார்த்தால், அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிப்பு இருப்பது உறுதி. இதற்கான கணக்கீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் 3 சதவிகிதம் அதிகரிப்பு என்ற பேச்சு தவறாகவே தெரிகிறது. இருப்பினும், இறுதி முடிவு அரசிடம் உள்ளது. ஆனால், அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் வரை, இது குறித்து எதையும் தெளிவாக கூற முடியாது. 


மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. பம்பர் ஊதிய உயர்வு! எவ்வளவு தெரியுமா?


ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்


செப்டம்பரில் டிஏ மற்றும் டிஆர் உயர்த்தப்பட்டால், ஜூலை 1 முதல் உயர்த்தப்பட்ட விகிதங்கள் அமல்படுத்தப்படும். முதலாவதாக, நிதியமைச்சகத்தின் செலவினத் துறையானது, வருவாய் தாக்கங்களுடன் DA அதிகரிப்பதற்கான முன்மொழிவைத் தயாரிக்கும். அதன் பிறகு, இந்த திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்கப்படும். அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, இது ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும். ஒரு கோடிக்கும் மேலான மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். தற்போது இவர்கள் அடிப்படை ஊதியம் / ஓய்வூதியத்தில் 42% என்ற விகிதத்தில் அகவிலைபப்டி (DA) / அகவிலை நிவாரணத்தை (DR) பெற்று வருகின்றனர். 


முன்னதாக, மார்ச் 24, 2023 அன்று அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. இந்த மாற்றம் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்தது. ஜனவரி 2023 முதல் அகவிலைப்படி 42 சதவிகிதமாக அதிகரித்தது. 


இப்படித்தான் DA கணக்கிடப்படும்


ஜூலை 2023 இல், அகவிலைப்படி குறைந்தபட்சம் 4 சதவீதம் அதிகரிக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். இதன் பின்னணியில் உள்ள தர்க்கம் என்னவென்றால், விலைக் குறியீட்டு விகிதத்தில் காட்டப்படும் நகர்வு காரணமாக, டிஏ மதிப்பெண் 46 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. ஜூன் மாதத்தில், குறியீட்டின் எண்ணிக்கை 136.4 புள்ளிகளாக இருந்தது. இதன் அடிப்படையில் கணக்கீடு பார்த்தால், டிஏ மதிப்பெண் 46.24ஐ எட்டியுள்ளது. அதாவது மொத்த டிஏவில் 4% அதிகரிப்பு இருக்கும். ஏனெனில், டிஏ ஹோல் நம்பராக எடுக்கப்படுகிறது. இந்த எண்ணின் தசம எண் 0.51 க்கும் குறைவாக இருப்பதால் அது 46 சதவீதமாக மட்டுமே கருதப்படும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி... 2 ஆண்டுகள் கூடுதல் விடுப்பு கிடைக்கும்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ