இந்தியாவின் மிகவும் முக்கிய இந்துப் பண்டிகைகளில் ஒன்று துர்கா பூஜை. இந்தியாவில் ஆண்டுதோறும் நவராத்திரி மற்றும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாதம்தோறும் வரும் அஷ்டமி திதியில் துர்கையை வழிபடுவது மிகவும் விசேஷம். புரட்டாசி மாதம் எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதி, மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என்றே அழைக்கப்படுகிறது. துர்காஷ்டமி நாளில், ராகுகால வேளையில் ஆலயங்களில் உள்ள துர்கை அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நவராத்திரியின் எட்டாவது நாளில் துர்காஷ்டமி வருவதால், வீட்டிலும் துர்கை அம்மனை வழிபடலாம். 


இந்நிலையில் இன்று துர்காஷ்டமி நாளில், இந்தியா முழுவதும் துர்கை அம்மனைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர்.