புதுடெல்லி: இன்று நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரே வாரத்தில் ஐந்தாவது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது. பர்பானியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .100.20 ஆகவும், போபாலில் லிட்டருக்கு ரூ .99.55 ஆகவும் உள்ளது. ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கநகர் மாவட்டத்தில் லிட்டர் ரூ .102.42 க்கும், மத்திய பிரதேசத்தின் அனுப்பூரில் ரூ .102.12 க்கும் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.


அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் விலை அறிவிப்பின்படி, தேசிய தலைநகரில் பெட்ரோல் (Petrol) விலை லிட்டருக்கு 26 பைசா மற்றும் டீசல் லிட்டருக்கு 33 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 


சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 93.38 ஆகவும் டீசல் லிட்டருக்கு ரூ. 86.96 ஆகவும் உள்ளது. நாட்டில் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல்கள் இருந்த நிலையில், 18 நாட்களாக எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. மே 4-க்குப் பிறகு ஐந்தாவது முறையாக இன்று விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. 


இன்றைய விலை அதிகரிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளது. டெல்லியில், இப்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ .91.53 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ .82.06 ஆகவும் உள்ளது.


2021 மே 10 அன்று நான்கு மெட்ரோ நகரங்களில் டீசல் மற்றும் பெட்ரோலின் விலை வேறுபாட்டை இங்கே காணலாம்.


ALSO READ: Petrol diesel price today: நான்காவது நாளாக உயர்ந்தது விலை, தொடருமா இந்த போக்கு?


டெல்லியில் பெட்ரோல் விலையில் மத்திய அரசின் பங்கு லிட்டருக்கு ரூ .32.98 ஆகவும், விற்பனை வரி அல்லது மாநில அரசின் VAT-ன் பங்கு ரூ .19.55 ஆகவும் உள்ளது.


டீசலைப் பொறுத்தவரை, மத்திய கலால் வரி 31.83 ரூபாயும், வாட் ரூ .10.99 ஆகவும் சேர்க்கப்படுகிறது. இது தவிர, விலையில் ஒரு லிட்டருக்கு பெட்ரோலுக்கு குறைந்தபட்சம் ரூ .2.6 மற்றும் டீசலுக்கு ரூ .2 என்ற டீலர் கமிஷனும் அடங்கும்.


பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சர்வதேச விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி திருத்தப்படுகின்றன.
கொரோனா வைரஸின் (Coronavirus) இரண்டாவது அலை நாட்டில் ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் விற்பனையை வெகுவாகக் குறைத்துள்ளது. தொற்று பரவுவதைத் தடுக்க போடப்பட்ட பல உள்ளூர் மற்றும் வெவ்வேறு இடங்களுக்கிடையிலான கட்டுப்பாடுகள் எரிபொருளுக்கான தேவையைக் குறைத்துள்ளன என்று பூர்வாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.


"கோவிட்டுக்கு முந்தைய அதாவது 2019 ஏப்ரல் மாதம் இருந்த எரிபொருள் தேவையை ஒப்பிட்டுப் பார்க்கையில், ஏப்ரல் மாத இறுதியில், ஒட்டுமொத்த எரிபொருள் தேவை சுமார் 7 சதவிகிதம் குறைந்துள்ளது" என்று பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) சந்தைப்படுத்தல் மற்றும் சுத்திகரிப்பு நிலைய இயக்குநர் அருண் சிங் தெரிவித்தார்.


ALSO READ: முகக்கவசம் அணியாவிட்டால் ஏப்ரல் 10 முதல் பெட்ரோல் டீசல் கிடையாது: பெட்ரோலிய வணிகர் சங்கம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR