Bal Jeevan Bima Yojana: நாட்டில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வருமானத்தைவிட அதிகளவில் செலவுகள்  அதிகரித்து வருகின்றன.  இந்த சூழ்நிலையில் மக்கள் தங்கள் சேமிப்புகளை வலுப்படுத்த வேண்டும், அதிலும் குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை இப்போதிலிருந்தே சேமிக்க தொடங்க வேண்டும்.  இப்போதிருந்தே உங்கள் குழந்தைகளுக்காகச் சேமிக்கத் தொடங்கவில்லை என்றால், வரும் நாட்களில் கல்வி மற்றும் இதர செலவுகளை ஏற்பாடு செய்வது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடும்.  குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்த குழந்தை ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஒரு நல்ல திட்டமாகும்.  இதற்கெனவே மத்திய அரசுக்கு சொந்தமான தபால் அலுவலகம் பால் ஜீவன் பீமா யோஜனா எனும் சிறப்பான திட்டத்தை வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | EPFO: PF பணத்தை இந்த ஆப் மூலம் சுலபமாக பெற்று கொள்ளலாம்!



தபால் அலுவலகம் வழங்கும் இந்த பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில், ஒரு நாளைக்கு ரூ.6 முதலீடு செய்வதன் மூலம் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை மேம்படுத்தலாம்.  இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் குழந்தையின் கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான செலவை முன்கூட்டியே சேமிக்க முடியும்.  குழந்தையின் பெற்றோர் மட்டுமே இந்த திட்டத்தை வாங்க முடியும் மற்றும் இந்தத் திட்டத்தைப் பெற சில விதிமுறைகளும் உள்ளது.  குழந்தைகளுக்காக தபால் அலுவலகம் வழங்கும் இந்த திட்டத்தைப் பெற விரும்பும் பெற்றோரின் வயது 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் 5 முதல் 20 வயது வரை உள்ள குழந்தைகள் பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம்.  இந்தத் திட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே பாலிசியை வாங்க முடியும், மூன்றாவது குழந்தைகளுக்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தில் உங்கள் குழந்தைக்கு ஒரு நாளைக்கு ரூ.6 முதல் ரூ.18 வரையிலான பிரீமியம் தொகையை டெபாசிட் செய்யலாம்.  இந்த திட்டத்தில் தினமும் ரூ.6 பிரீமியமாக ஐந்து ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யலாம் மற்றும் தினமும் ரூ.18 வீதம் இருபது வருடங்களுக்கு பிரீமியம் செலுத்தினால் திட்டத்தின் முதிர்வில் பாலிசிதாரர்களுக்கு ரூ.1 லட்சம் பெறலாம்.


மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் ரூ.147 டெபிட் செய்யப்பட்டதா? உடனே செக் பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ