மனிதர்களான நாம், ஒரு சில சமயத்தில் எளிதில் கணிக்க முடியாத உயிரினங்களாகவும், பல சமயங்களில் தட்டினால் வழிக்கு வந்து விடும் தத்திக்களாகவும் இருப்பாேம். அப்படி நாம் நடந்து கொள்வது நம்மை சுற்றியிருக்கும் சூழ்நிலையை வைத்துதான் அமைகிறது. ஒரு சிலர், தனக்கு ஏற்றார் போல தன்னை சுற்றி இருப்பவர்களை ஆட்டிவைக்க தெரியும். இதை சில சிம்பிளான சைக்காலஜி ட்ரிக்ஸை வைத்து செய்ய முடியும். இதை செய்தால் கண்டிப்பாக எந்த உதவி தேவை என்றாலும் அது கிடைத்து விடும். அவை என்னென்ன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம்பிக்கையை வளர்த்தல்:


எந்த ஒரு நல்ல விஷயமும் நம்பிக்கையின் மூலமாகத்தான் வளரும். எனவே, நீங்கள் யாரிடம் உதவி கேட்க நினைக்கிறீர்களோ அவர்களுடன் நம்பிக்கையான உறவை வளர்க்க வேண்டும். அவருக்கும் உங்களுக்கும் எந்த விஷயம் பொதுவாக இருக்கிறதோ, அதை வைத்து அவர்களிடம் பேச்சு கொடுக்க வேண்டும். 


பாராட்டுகள்:


ஒருவரை, உங்கள் பேச்சை கேட்க வைக்க வேண்டும் என்றால், முதலில் நீங்கள் அவர்களிடம் ஏதாவது கொடுக்க வேண்டும். அது பொருளாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது ஒரு தகவலாக இருக்கலாம், உதவி, பாராட்டு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 


சிறிய உதவி:


அவரிடம் நீங்கள் கேட்க நினைக்கும் உதவியுடன் அணுகுவதற்கு முன்பு, முதலில் சிறிய உதவியுடன் ஆரம்பிக்க வேண்டும். அந்த உதவி, அவர்கள் எளிதில் செய்து கொடுக்க கூடியதாக இருக்க வேண்டும். அவர்கள் அது போன்ற சிறிய உதவியை செய்ய ஒப்புக்கொண்டார் என்றால்,  நீங்கள் கேட்கும் பெரிய உதவியையும் செய்து தர மறுக்க மாட்டார். 


பிற ஆதாரங்கள்:


உங்கள் யோசனையை மற்றவர்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பதையும், அதன் மூலம் அவர்கள் எப்படி பயன்பெற்றார்கள் என்பதை ஆதாரமாக அவரிடம் கூறுங்கள். இது உங்களுக்கு சாதகமாக அமையலாம். 


அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும்:


அவர்கள் பேசுவதிலும், அவர்கள் கூறும் விஷயத்திலும் நீங்கள் உண்மையாகவே ஆர்வம் காட்ட வேண்டும். அவர்கள் குறித்த விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வது, அவர்களுக்கு உங்கள் மீது நல்ல அபிப்ராயம் வரும். இதனால், நீங்கள் கூறும் விஷயங்கள் அனைத்திற்கும் அவர்கள் ஆமாம் சொல்வர். 


மேலும் படிக்க | Red Alert என்றால் என்ன? மழை காலங்களில் இது கொடுக்கப்படுவது ஏன்?


உணர்ச்சிகளை மேற்கோள்காட்ட வேண்டும்:


நீங்கள் என்ன பேசினாலும், அதில் உங்கள் உணர்ச்சிகளையும் சேர்த்து கூற வேண்டும். உணர்ச்சிகளுக்கு வலிமை அதிகம். அது, அவர்களுக்கு உதவி செய்ய வைக்கும் கருவியாக செயல்படும். 


பாசிடிவான மொழி:


“நீங்கள் இதற்கு ஒப்புக்கொள்வீர்களா என்று தெரியவில்லை” என்ற சொல்லாடலுடன் உதவியை கேட்க வேண்டாம். நீங்கள் எந்த விஷயத்திற்காக அவரிடம் உதவி கேட்க நினைக்கிறீர்களோ, அதை தெளிவாக அவர்களிடம் கூற வேண்டும். நீங்கள் நெகடிவாக பேச ஆரம்பித்தாலோ, அல்லது தெளிவாக பேசவில்லை என்றாலோ அவர்களுக்கு உதவி செய்ய தோன்றாது. 


தன்னம்பிக்கை:


உங்களிடம் தன்னம்பிக்கை குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் அது பிறருக்கு தெரிய ஆரம்பித்து விடும். நீங்கள் உதவி கேட்கும் போது மட்டுமல்ல, எதை பேசினாலும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதற்கு, கேட்கும் உதவியில் நீங்கள் முதலில் தெளிவாக இருக்க வேண்டும், பேசும வார்த்தையிலும் தெளிவு இருக்க வேண்டும். 


மேலும் படிக்க | மழைக்காலத்தில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டாம்! உடனே நோய்கள் ஏற்படும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ