சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய சினிமாவிற்கே சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து ஆனால் ரஜினியின் குடும்பத்தில் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. 


இந்நிலையில் தற்போது முதல் முறையாக சௌந்தர்யா ரஜினிகாந்த் மவுனம் களைத்து தன்னுடைய திருமணம் குறித்து டிவிட் பதிவி ஒன்று செய்துள்ளார். அதில், இன்னும் ஒரு வாரம். பெருமை கொள்ளும் தருணம் #VedVishaganSoundarya என்ற ஹேஸ்டேக்குடன் பதிவு செய்துள்ளார்.


 



 


இவர்களுக்கு வரும் பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். 


சௌதர்யா  2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அஷ்வினுக்கும், சௌந்தர்யாவிற்கும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் என்பவரை மறுமணம் செய்யவுள்ளார்.