Turmeric Water: தினசரி உணவில் ஒரு பொருளாக மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளை அதிகம் பயன்படுத்தினாலும் அதன் நன்மைகளை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. கறி வாங்கினால் முதலில் மஞ்சள் கொண்டு தான் கழுவப்படும். அதே போல காய்கறிகள் அல்லது பருப்பு வகைகள் மூலம் மஞ்சளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். மஞ்சளில் உள்ள பண்புகள் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மஞ்சளில் ஆண்டிசெப்டிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உணவின் நிறம் மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கிறது. மேலும் பளபளப்பான சருமத்தை பெறவும், காயத்தையும் குணப்படுத்தவும் உதவுகிறது. பழங்கால ஆயுர்வேத மருத்துவத்திலும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சுகர் அளவை தட்டி கழிக்க இந்த உலர் பழங்களை கட்டாயம் சாப்பிடுங்கள்


உடல் செரிமானம் முதல் உடலை முழுமையாக ஆரோக்கியமாக வைத்திருக்க மஞ்சள் பெரிதும் பயன்படுகிறது. மேலும் பாரம்பரிய முறைகளிலும் மஞ்சள் முக்கியமான பொருளாக பார்க்கப்படுகிறது. திருமண விசேஷங்கள், கோவில்கள், வழிபாடுகள் என அனைத்திலும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளை தினசரி பயன்படுத்தி வந்தால் உங்கள் சருமத்தை இயற்கையான முறையில் பளபளப்பாக மாற்ற முடியும். ஒரு சிலருக்கு மஞ்சள் பயன்படுத்துவதால் முகம் மஞ்சளாக மாறுவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே அதனை சரியான முறையில் பயன்படுத்துவது அவசியம். பளபளப்பான சருமத்தை பெற மஞ்சளை எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.


மஞ்சளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் குர்குமின்கள் அதிகம் உள்ளன. இவை சருமத்தை உள்ளே இருந்து பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இன்று நாம் பயன்படுத்தும் நிறைய செயற்கை தயாரிப்புகளில் மஞ்சள் முக்கியமாக சேர்க்கப்படுகிறது. எனவே கடைகளில் வாங்கும் இந்த விலையுயர்ந்த சரும கிரீம்களுக்கு பதிலாக வீட்டிலேயே மஞ்சளை சிறந்த முறையில் பயன்படுத்தினால் நல்ல பொலிவை பெற முடியும்.  பளபளப்பான சருமத்தை பெற தினமும் மஞ்சள் கலந்த நீரால் முகத்தைக் கழுவலாம். தினமும் இரவில் தூங்கும் முன் மஞ்சள் கலந்த நீரில் முகத்தை கழுவி வந்தால், வெகு சில நாட்களிலேயே நீங்கள் வித்தியாசத்தை உணர முடியும்.


மஞ்சள் நீரின் நன்மைகள்


முகத்தில் உள்ள அழுக்குகளை மஞ்சள் நீர் சுத்தம் செய்கிறது. பலரும் முகப்பரு பிரச்சனையால் அவதிப்பட்டு இருப்பீர்கள். இதற்கு உணவு முறையும், வாழ்க்கை முறையும் முக்கிய காரணமாக அமைகிறது. முகப்பரு வந்து மறைந்தவுடன் அந்த இடம் கருப்பாகவும் மாறிவிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் முகத்தை மஞ்சள் நீரில் கழுவுவது உங்களுக்கு நன்மைகளைத் தரும். ஒருசிலருக்கு கண்களுக்கு கீழ் அடிக்கடி கருவளையம் ஏற்படும் பிரச்சனை உள்ளது. இது முகத்தின் அழகை கெடுத்துவிடும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் இரவு தூங்கும் முன்பு முன் மஞ்சள் நீரில் முகத்தை கழுவினால் இந்த பிரச்சனை சரியாகும்.


மேலும் படிக்க | ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க...காலையில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்! 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ