Sperm Donation:  விந்து தானம் அல்லது விந்து கொடை மூலம் குழந்தை கனவு நனவாகி பல குடும்பங்களின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது.  உலகில் மில்லியன் கணக்கான தம்பதிகள் இந்த நாட்களில் தவறான வாழ்க்கை முறை  மற்றும் உணவு முறை மாற்றங்கள் காரணமாக கருத்தரிக்க முடியாமல்  சிரமங்களை எதிர்கொள்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அத்தகைய தம்பதிகளுக்கு, IVF மட்டுமே பெற்றோராக மாறுவதற்கான ஒரே வழி. இதற்கு அவர்களுக்கு விந்தணு தானம் செய்பவர் தேவை. இந்த தேவை அதிகமாக இருக்கும் நிலையில், சப்ளை மிகவும் குறைவாக உள்ளது. விந்தணு தானம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும். 


IVF தொழில்நுட்பத்துடன் கருவுறுதல் சிகிச்சைக்கு விந்தணு தானம் மிகவும் முக்கியமானது. இந்த குழந்தை இல்லாத தம்பதியினரோ அல்லது தனித்து வாழும் பெண்ணோ தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என விரும்பினால், குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.


உங்கள் விந்தணுவை ஏதேனும் கருத்தரிப்பு மருத்துவமனை அல்லது விந்தணு வங்கிக்கு தானம் செய்ய விரும்பினால், உங்கள் விந்துவைப் பயன்படுத்தி பிறக்கும் குழந்தையின் மீது உங்களுக்கு எந்த உரிமையும் இருக்காது.


இருப்பினும், ஏப்ரல் 2005 க்குப் பிறகு விந்தணு தானம் செய்வதன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு 16 வயது நிறைவடைந்த பிறகு விந்தணு தானம் செய்பவர் குறித்த சில தகவல்களைக் கேட்க உரிமை உண்டு. அதே நேரத்தில், 18 வயதை அடைந்ததும், நன்கொடையாளரின் பெயரையும் கடைசியாக அறியப்பட்ட முகவரியையும் அறிய நீங்கள் கோரலாம்.


ALSO READ | பகீர் தகவல்! காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா..!!


யார் விந்தணு தானம் செய்யலாம்


- விந்து தானம் செய்பவரின் வயது 18 முதல் 41 வயதுக்குள் இருக்க வேண்டும்.


- நன்கொடையாளர் அனைத்து மருத்துவ பரிசோதனைக்கும் ஒப்புக்கொள்ள வேண்டும்


- விந்தணு தானம் செய்பவருக்கு எந்தவித நோய் அல்லது பால்வினை நோய்களும் இருக்கக்கூடாது


- ஆரோக்கியமாக இருக்க வேண்டும்


- அவர் தனது குடும்பத்தின் மருத்துவ வரலாற்றை வழங்க ஒப்புக்கொள்ள வேண்டும் (பெற்றோர், தாத்தா பாட்டி, உடன்பிறந்தவர்கள் மற்றும் குழந்தைகள்)


-  தானம் செய்பவருக்கு பரம்பரை நோய் எதுவும் இருக்கக்கூடாது.


ALSO READ | வினோத வழக்கு: இறந்த மகனின் விந்தணுவை திருப்பித் தருமாறு மருமகளிடம் கேட்கும் மாமியார்


-  அவர் எந்த வகையான மருந்துகளையும் பயன்படுத்துபவராக இருக்க கூடாது.


- அவரது விந்தணுவில் இருந்து பிறந்த குழந்தை 18 வயதை எட்டினால், தகவல் கோரப்பட்டால், அவரது அடையாளத்தை வெளியிடலாம் என்று அவர் உறுதிமொழி அளிக்க தயாராக இருக்க வேண்டும்.


- அவர் தனது பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது அடையாளச் சான்று எதையும் வழங்க ஒப்புக்கொள்ள வேண்டும்


- விந்தணுக்கள் உயர் தரத்தில் இருக்க வேண்டும் 


பிரிட்டனில் விந்தணு தானம் மூலம் ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. விந்தணு தானம் செய்வதற்கு ஈடாக பணம் கேட்பது இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், விந்தணு தானத்தின் போது ஏற்படும் செலவுகளுக்கு நன்கொடையாளருக்கு பணம் வழங்கப்படுகிறது. 


இங்கிலாந்தில் குழந்தை இல்லாத பெரும்பாலான தம்பதிகள் தங்கள் குழந்தைகளைப் பெறுவதற்காக IVF மையங்கள் அல்லது கருவுறுதல் கிளினிக்குகளுக்குச் செல்கின்றனர். அங்கு செலவு மிக அதிகம். லண்டன் விந்தணு வங்கியில் விந்தணு எடுப்பதற்கான செலவு 850 பவுண்டுகள் முதல் 1150 பவுண்டுகள் வரை இருக்கும். அதிக செலவு செய்ய முடியாதவர்கள், சமூக வலைதளங்கள் மூலம் விந்தணு தானம் செய்பவர்களை தேடும் பழக்கம் உள்ளது.


ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR