உலகில் ஆடம்பரமான வாழ்வுக்காக அறியப்படும் நகரம் துபாய். இங்கு பல நவீன விஷயங்கள் அறிமுகமாகும். அந்த வரிசையில் உலகிலேயே முதன்முறையாக 22 காரட் தங்க முலாம் பூசப்பட்ட வடா பாவ் முதன்முறையாக துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், துபாயின் கராமா (Karama) வில் அமைந்துள்ள  O’Pao  என்ற உணவகம் இந்திய உணவுகளை பரிமாறுவதற்கு பெயர் பெற்றது. இந்த உணவகம் காராட்டிரம் மற்றும் குஜராத் பகுதிகளில் மிகவும் பரவலான ஒரு சாலையோர உணவான வடப்பாவின் சுவைக்கு சற்றும் குறைக்காமல் வழங்கி வருகிறது. தங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவகையில் மிகவும் சுவையான, அதிக ரகங்களை சமைத்து பரிமாறுகிறது. ஆனால், கடந்த வாரம் இந்த பட்டியலில் கூடுதலாக ஒன்றை இணைத்துள்ளது O’Pao.


ALSO READ Gold Foods: தங்க பிரியாணி, தங்க முலாமிட்ட உணவுகளை சாப்பிடலாமா?


ஆம், தங்கம் சேர்க்கப்பட்ட வடா பாவ். சும்மா இல்லைங்க 22 கேரட் தங்கம் சேர்க்கப்பட்ட வடப்பாவ். மரப்பெட்டியில் வைத்து நைட்ரஜன் புகையோடு அழகாக பரிமாறப்படும் இந்த உணவு சீஸ் மற்றும் ஃப்ரெஞ்ச் ட்ரஃபில் பட்டர் கொண்டு சமைக்கப்படுகிறது. இதன் மேலே ஹோம்மேட் மிண்ட் மயோ, sweet potato fries மற்றும் mint lemonade சேர்த்து வழங்கப்படுகிறது. சரி, இதோட விலை என்னனு கேக்கலையே கொஞ்சம் கம்மி தான் வெறும் ரூ. 2000 மட்டும் தான்.


எல்லாம் ஆயில் பண்ற வேலை. வேற ஒன்னும் இல்லை. உலகில் மிகவும் விலை உயர்ந்த உணவுகள் எல்லாம் துபாயில் தான் கிடைக்கும் போல. ஏற்கனவே தங்க பர்கர், ஐஸ் க்ரீம், ஃப்ரெஞ்ச் டோஸ்ட் மற்றும் பிரியாணி எல்லாம் செய்த இவர்களுக்கு இந்த தங்க “வடப்பாவ்” ஒன்றும் புதிதில்லை தான். ஓகே நீங்கள் அடுத்த முறை துபாய் செல்லும் போது கட்டாயம் இந்த உணவுகளை ட்ரை பண்ணி பாக்க மறக்காதீங்க.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR