தெரியாத ஒரு நபர் நம்மை பார்த்து சிரித்தாலோ அல்லது நாம் செய்த ஒரு விஷயத்தை பாராட்டினாலோ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எதிர்பாராமல் நம் மீது ஒருவர் செலுத்தும் அன்பு மட்டுமே நமக்கு மனிதர்கல் மீது நம்பிக்கை உண்டாக காரணமாக இருக்கும். எதையும் எதிர்பாராமல் அன்புக்குரியோருக்கு ஒன்று என்றால் ஓடி வருபவர்கள், ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அப்படி, நல்ல மனதுடன் வலம வரும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா..? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.கடகம்:


பஞ்சபூதங்களில் நீரின் தன்மையை கொண்டவர்கள், கடக ராசிக்காரர்கள். இவர்கள் பிறரின் உணர்வுகளை மதிக்கும் திறன் கொண்டவர்களாக விளங்குவர். பிறருடன் உணர்வு ரீதியாக தொடர்பு கொள்வதில் கைதேர்ந்தவர்களாக இருப்பர்.  இவர்களது கருணை மற்றும் அன்பிற்கு எல்லையே இருக்காது. தங்களது அன்புக்குரியோருக்கு ஒன்று என்று வந்துவிட்டால் தங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று உதவி செய்ய முன்னால் வந்து நிற்பர். எந்த சூழ்நிலையிலும் நேர்மை தவறாதவர்களாகவும் இவர்கள் இருப்பர். இவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு இவரால் பல வழிகளில் நிம்மதி வந்து சேரும். 


2.மீனம்:


பறந்து விரிந்த இதயம் கொண்டவர்கள், மீன ராசிக்கரர்கள். ஒருவர் என்ன கூற வருகிறார் என்பதை இவர்களால், சொல்லாமலேயே கண்டுபிடித்து விட முடியும்.  சிலர் உணரும் விஷயங்களை அவர்கள் கூறாமலேயே இவர்களால் உணரவும் முடியும். மனதில் இருப்பதை யாராவது வந்து இவர்களிடம் கூறினால், இவர்கள் முழுமையாக காது கொடுத்து கேட்பர். அன்பு காட்டுவதிலும் கருணையுடன் பிறரிடம் நடந்து கொள்வதிலும் சிறந்தவர்களாக இருப்பர். இவர்களால் பலரது வாழ்வில் பாசிடிவான மாற்றங்கள் ஏற்படும். 


மேலும் படிக்க | குள்ளமான பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்..! ஏன் தெரியுமா..?


3.துலாம்:


பிறருடன் நல்லிணக்கத்தையும் அன்பையும் வளர்த்துக்கொள்வதில் சிறந்தவர்கள், துலாம் ராசிக்காரர்கள். ஒரு உறவில் விரிசல் ஏற்பட்டால் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்ற வழியை மட்டுமே கருத்தில் கொள்வர். அன்புக்குரியோருடன் விவாதம் ஏற்பட்டாலும், அவர்களுடன் வீண் சண்டை போடுவதை தவிர்ப்பவர்கள் இவர்கள். இவர்களின் நல்ல மனதை பார்த்தே பலர் இவர்களால் வசீகரிக்கப்படுவர். இவர்கள்  இருப்பதால், இந்த உலகம் சிறந்த இடமாக மாறுகிறது. 


4.கன்னி:


கன்னி ராசிக்காரர்கள் நடைமுறை வாழ்க்கையை பின்பற்றும் பழக்கத்தினை கொண்டிருப்பர். ஆனாலும் எந்த ஒரு முக்கிய முடிவை எடுக்கும் முன்னரும் தனது மனம் கூறும் விஷயத்தை மட்டுமே இவர்கள் பின்பற்றுவர். பிறர் சிரமப்படும் போது, இவர்கள் சிரமத்தில் இருந்தாலும் அவர்களுக்கு உதவ முன்வருவர். இவர்களது கருணையும் பாசமும் பிறரால் அவ்வப்போது கண்டுகொள்ளப்படாமல் இருந்திருக்கும். அதற்கு காரணம்,  இவர்கள் எதை செய்தாலும் அதை வெளியில் கூறாமல் இருப்பதுதான். இவர்களின் அன்பால் பலரது வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும். 


5.தனுசு:


தனுசு ராசிக்காரர்கள் சாகச பிரியர்களாக இருப்பர். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை எப்படி லாவகமாக கையாளலாம் எனும் இவர்களது எண்ணம் இவர்களை சுற்றி இருப்போருக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும். எந்த உதவி கேட்டாலும் தயங்காமல் செய்து கொடுப்பர். அனைவரிடத்திலும் நல்ல விஷயங்களை மட்டுமே பார்க்க வேண்டும் என்று இவர்கள் எண்ணுவதால் வீண் மன கவலைகளில் இருந்து விடுபடுகின்றனர். 


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு நல்ல செய்தி: இனி கையில் அதிக சம்பளம் வரும்.. ஊதிய விதிகளில் மாற்றம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ