சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி ஷர்மா என்பவர் தனது கணவருடன் ஆஸ்திரேலியாவிற்கு சென்றார். இவர் பல்வேறு காரணங்களால் கணவரைவிட்டு பிரிந்து கடந்த 17 ஆண்டுகளாக தன் பிள்ளைகளுடன் தனியே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரியின் மகள் சந்தியா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாம் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர்கள் இருவருக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. தந்தையுடன் இல்லாத சந்தியா அவர் தந்தைக்கு பதிலாக அவரது தாய் கன்னியாதானம் செய்தார். தாய் மடியில் மகள் உட்காரவைத்து கன்னியாதானம் செய்து தந்தார். தற்போது இந்த புகைப்படமானது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.