திருப்பதி திருமலையில் இந்தாண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதுவும் நடக்காது என திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி கூறியது:-


திருமலையில் எப்போதும், ஆகம விதிப்படி நடக்கும் உற்சவங்கள், தெலுங்கு புத்தாண்டான உகாதி மட்டுமே விமரிசையாக கொண்டாடப்படும். 


வைகுண்ட ஏகாதசி, உகாதி, போன்ற உற்சவங்களின் திருமலை ஏழுமலையான் கோவிலில் மலர் அலங்காரங்கள், மின் விளக்கு அலங்காரங்கள் உள்ளிட்டவை செய்யப்படும்.


ஆங்கில புத்தாண்டிற்கு, திருப்பதியில் தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவதால் அவர்களுக்காக சில அலங்காரங்கள் செய்வது வழக்கம். இம்முறை ஆந்திர அறநிலையத்துறை ஆங்கில புத்தாண்டின் போது கோவில்களில் எவ்வித அலங்காரங்களும் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருமலையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் எதுவும் நடக்காது. 


இவ்வாறு அவர் கூறினார்.