கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தை தேனீக்கள் தாக்கிய ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் விஸ்டாரா ஏர்லைன்ஸின் இரண்டு விமானங்களால் தேனீக்கள் தாக்கப்பட்டுள்ளன. தற்போதைய சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரலாகி வரும் வீடியோவில், தேனீக்கள் கொல்கத்தாவின் (Kolkata) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் விஸ்தாரா விமானத்தின் ஜன்னலைத் தாக்குவதைக் காணலாம். தேனீக்கள் மிக அதிக அளவில் தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புத் துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தேனீக்களை விரட்டி அடித்தனர். சம்பவம் நடந்த சுமார் ஒரு மணி நேரம் விமானங்கள் ஓடுபாதையில் இருந்தன.



இந்த வீடியோ வைரலாகி (Viral Video) வருவதால் ட்விட்டர் பயனர்கள் சமூக ஊடகங்களில் பெரும் கேலி செய்துள்ளனர். இதைப் பற்றி எழுதிய ஒரு பயனர், 'Looks like honey pancakes inside' என்ற தலைப்பில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஒரு பயனர் இதற்கு பதிலளிக்கையில், 'தேனீ ஐந்து நட்சத்திர விஸ்டாராவை சாப்பிட ஏங்குகிறது'. என்கிறார். மற்றொரு பயனர், 'கொல்கத்தாவில் உள்ளவர்கள் இனிப்புகளை அதிகம் விரும்புவதில் ஆச்சரியமில்லை' என்றார். 


முன்னதாக 2019 ஆம் ஆண்டிலும் கொல்கத்தா விமான நிலையத்தில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தது. அகர்தலாவுக்குச் செல்லும் ஏர் இந்தியா (Air India) விமானத்தை தேனீக்கள் குழு தாக்கியது. இதனால், விமான போக்குவரத்து சுமார் இரண்டரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.


ALSO READ |  Watch Viral Video: தண்ணீர் தொட்டியில் கும்மாளம் போடும் குட்டி யானை..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR