ப்ளோரிடாவில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவரது நான்கு காதலர்கள் உரிமை கொண்டாடும் விஷயம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய நாடுகளின் ப்ளோரிடாவில் வசிப்பவர் டோரி ஓட்ஜா. இவர் தனது நான்கு காதலர்களுடன் தற்போது வசித்து வருகின்றார். இதன் காரணமாக தற்போது அவரது வயிற்றில் கருவுற்று இருக்கும் குழந்தைக்கு அவரது நான்கு காதலர்களும் உரிமை கொண்டாடி வருகின்றனர்.


இந்த விஷயம் கேட்பதற்கு அதிர்சியாக இருக்கலாம். ஆனால் இதனை விடவும் அதிர்ச்சியான விஷயம், டோரி ஓட்ஜா-வின் பெற்றோர்கள் தன் மகளின் நான்கு காதலர்களையும் ஏற்றுக்கொண்டு, நால்வரின் குழந்தை தான் தங்கள் மகளின் வயிற்றில் வளர்வதாக தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் விரைவில் உலகை காண இருக்கும் குழந்தையின் நலனை கருதி குறித்த 5 பேரும் ஒருமித்து வாழ முடிவு செய்துள்ளனர். இந்த செய்தியினை கேட்ட அனைவரும் இந்த ஐந்து பேரின் காதல் மற்றும் அவர்களது ஒற்றுமை குறித்து வியப்பினை தெரிவித்து வருகின்றனர்.


உள்ளூர் ஊடக அறிக்கையின் படி டோரி ஓட்ஜா தனது பள்ளி பருவத்தின் போது மார்க்(18)-னை சந்நித்து காதல்வயப்பட்டுள்ளார். பின்னர் இரண்டு, மூன்று மாதங்களில் நண்பர் டர்விஸை(23) சந்தித்து அவருடன் காதலில் விழுந்தார். சிறிது காலம் கழித்து தங்கள் நண்பர் வட்டத்தில் அறிமுகமான ஏதன்(22) மற்றும் கிறிஸ்டோபர் (22) ஆகியோரினையும் தனது இல்லறத்தில் இணைத்துக் கொண்டார் டோரி.


தற்போது டோரி தனது 3 காதலர்கள் (மார்க், டார்விஸ் மற்றும் ஏதன் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். அதேவேளையில் கிறிஸ்டோபர் தனி வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் தற்போது குழந்தையின் நலன் வேண்டி 5 பேரும் ஒருமித்து வாழ முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.