மும்பை: வீடியோகான் முறைகேட்டு வழக்கில் ICICI  தமைமைச் செயல் அதிகாரி சந்தா கொச்சார், அவரது கணவர் தீபக் கொச்சார் மற்றும் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோருக்கு எதிராக CBI தரப்பில் லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் கொடுத்த விவகாரத்தில் ICICI வங்கியின் தமைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சார் மற்றும் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது CBI வழக்கு தொடுத்துதுள்ளது. 


இந்த வழக்கின் விசாரணையில் முன்னதாக கடந்த 2012-ம் ஆண்டு 20 வங்கிகளின் கூட்டமைப்பு இணைந்து வீடியோகான் குழுமத்திற்கு ரூ.40,000 கோடி கடன் வழங்கிருந்ததாகவும், இதில் ஒரு வங்கியான ICICI வீடியோகான் குழுமத்திற்கு ரூ.3,250 கோடியை அளித்ததகாவும் தெரிவிக்கப்பட்டது.


ICICI வங்கியிடம் இருந்து கடன் பெற்ற 6 மாதத்துக்குப் பின்னர் இந்த நிறுவனத்தின் உரிமையினை ரூ.9 லட்சத்துக்கு தீபக் கொச்சாரின் அறக்கட்டளை ஒன்றுக்கு வேணுகோபால் தூத் கொடுத்துள்ளார். 


இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ICICI தலைமை செயல் அதிகாரி சந்தா கொச்சாரின் உறவினர் ராஜீவ் கொச்சாரை மும்பை விமானநிலையத்தில் CBI கைது செய்தது.


இந்நிலையில் தற்போது ICICI  தமைமைச் செயல் அதிகாரி சந்தா கொச்சார், அவரது கணவர் தீபக் கொச்சார் மற்றும் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோருக்கு எதிராக CBI தரப்பில் லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.