கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த ஆர்யா - சயிஷா சைகல் இருவரும் வரும் மார்ச் மாதம் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சினிமாவில் பல நாட்களாக சாக்லேட் பாய் பட்டத்துடன் இருப்பவர் நடிகர் ஆர்யா. உள்ளம் கேட்குமே, கலாப காதலா என தொடர் வெற்றிப்படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இந்நிலையில், சமீபகாலமாக நிஜ வாழ்க்கையிலும் சரி திரைத்துறையிலும் சரி தோல்விகளை சந்தித்து வருகிறார். 



கடம்பன் படத்திற்கு பிறகு சினிமாவிற்கு சிறிது இடைவேளை விட்ட ஆர்யா பின்னர் சின்னத்திரையில் முகம் காட்டினார். தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சியின்  மூலம் ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் படலம் நடந்தது. 16 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கடைசியாக 3 பெண்கள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகினர். ஆனால், வெறும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் துணைவியை தேர்வு செய்ய முடியாது என்று கூறிய ஆர்யா, எந்த முடிவும் எடுக்காமல் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார். 


இதற்கு பலரும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்த ஒரு வாரத்தில் ஆர்யா நடித்த கஜினிகாந்த் படத்தின் டிரைலர் வெளியானது. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சயிஷா சைகல் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையேயான காதல் தான், ஆர்யா அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை தேர்வு செய்யாததற்கு காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.


இதற்கிடையில் விரைவில் ஆர்யா - சாயிஷா ஜோடி திருமண வாழ்வில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த செய்திகளுக்கு இருவரும் அமைதி காத்து வந்த நிலையில் காதலர் தினமான இன்று இருவரும் கூட்டாக தங்களது திருமணம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.


முன்னதாக வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி ஹைதராபாத்தில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இதனை உறுதி செய்யும் விதமாக ஆர்தா தான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் மார்ச் மாதம் தங்களது திருமணம் நிகழவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஆர்யாவின் நெடுநாள் மொனம் கலைந்துள்ளது.