நடிகர் விஜய், நேற்றைய நிகழ்ச்சியில் தனது அரசியல் பிரவேசம் குறித்து எதுவும் பேசவில்லை என்றாலும் அதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் விஜய்தான் தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, விஜய் சினிமாவில் நடிப்பதை நிருத்தப்போவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா..


விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 10, 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக ஊக்கதொகை மற்றும்  சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது. சென்னையில் நடந்த இந்த விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்க விஜய் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.


மேலும் படிக்க | கவர்ச்சி கடலில் தமன்னா..! இதோ இன்னொரு வெப்சீரிஸிலும் தாராளம்


கோரிக்கை வைத்த மாணவர்கள்..


நடிகர் விஜய், தான் கலந்து கொள்ளும அனைத்து நிகழ்ச்சிகளிலும் வாழ்க்கை தேவையான பல கருத்துகளை கூறுவது வழக்கம். அதே போல, நேற்றும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான சில கருத்துகளை கூறினார். அப்போது, “நீங்கள்தான் வருங்கால வாக்காளர்கள்..உங்கள் கையை வைத்து உங்களையே குத்திக்காெள்ள வேண்டாம். ஒரு பிரதினிதி ஒரு தாெகுதியில் ஒரு ஓட்டிற்கு 1000 ரூபாய் கொடுக்கிறார் என்றால் அவர் எவ்வளவு சொத்தை சேர்த்து வைத்திருக்க வேண்டும். எனவே, இனி வரும் காலத்தில் ஓட்டு போடும் போது உங்கள் கண்களை நீங்களே குத்திக்கொள்ள வேண்டாம்..” என்பது போல பேசியிருந்தார். இதையடுத்து இவரிடம் பரிசு பெற்ற மாணவ-மாணவிகள் சிலர் “விஜய் அண்ணா அரசியலுக்கு வந்து அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர். இதை கேட்டுக்கொண்டிருந்த விஜய், எதுவும் பேசாமல் சிரித்துக்காெண்டிருந்தார். 


விரைவில் அரசியல் பிரவேசம்?


நடிகர் விஜய், கடந்த சில ஆண்டுகளாகவே தனது படத்திலும் சரி, அரசியல் கலந்த வசனங்களாக பேசி வருகிறார். இதே போலத்தான் நடிகர் ரஜினியும் தனது படங்களில் செய்தார். பல மேடை விழாக்களில் மக்களை கவர்வது போல பேசுவது, கருத்து கூறுவது, அரசியல் நடைமுறைகளை எடுத்துரைப்பது என்றிருந்தார். இதையே தற்போது ஃபாலோ செய்கிறார் விஜய். விஜய் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ‘தலைவா’ படம் வந்த புதிதில் இருந்தே இருக்கிறது. ‘சர்கார்’ படத்தில் அதை கன்ஃபார்ம் செய்து விட்டனர். இதையடுத்து விஜய் விரைவில் அரசியலில் குதிக்கப்போகிறார் என்ற செய்தி பரவி வருகிறது. 


சினிமாவை விட்டு விலகல்..


ஒரு ஆண்டில் இரண்டு, மூன்று படங்களில் நடித்து வந்த விஜய், இப்போத அதை அப்படியே ஒன்றாக குறைத்துக்கொண்டார். தலைவா படத்தில் தொடங்கி, விஜய்யின் பல படங்கள் பெரும் சர்ச்சையில் சிக்கி, ரிலீஸில் பிரச்சனைகள் ஏற்பட்டது. மெர்சல் படத்தில் ஜீ.எஸ்.டி குறித்த வசனங்கள், பீஸ்ட் படத்தில் நாட்டு பிரச்சனையை குறித்த பேச்சு, சர்கார் படத்தில் தமிழ்நாட்டு அரசியல் குறித்த பேச்சு என தனது படங்கள் மூலமாகவே மறைமுகமாக மக்களுக்கு தனது அரசியல் பிரவேசம் குறித்து ஹிண்ட் கொடுத்துவிட்டார் விஜய். இவர், தற்போது லோகேஷ் கனகராஜ்ஜின் லியோ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெங்கட் பிரபுவின் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படம்தான் விஜய்யின் கடைசி படம் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடித்து முடித்து விட்டு முழுநேர அரசியலில் விஜய் ஈடுபட போகிறாராம். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்துதான் இந்த முடிவை விஜய் எடுத்திருப்பதாக சிலர் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் இன்னும் விஜய் தரப்பில் இருந்து இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. 


மேலும் படிக்க | OTTல் வெளியாகியுள்ள புதிய திரைப்படங்கள்; Netflix, Amazon, Hotstar, ZEE5ல் பாருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ