நெய்வேலியில் என்எல்சி முன்பு கூடியிருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்து நடிகர் விஜய் செல்ஃபி எடுத்தது வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ சினிமா படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள என்.எல்.சி சுரங்கப்பகுதியில் நடந்து வருகிறது. இதன் இடையே வருமானவரித்துறையினர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னை அழைத்து சென்று விசாரணை நடத்தி பின்னர் விஜய் மீண்டும் நேற்று முன்தினம் மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்றார்.


இன்று 4-வது நாளாக மாஸ்டர் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக விஜய் புதுச்சேரியிலிருந்து காரில் இன்று காலை 9.30 மணிக்கு வந்தார். என்.எல்.சி. 2-வது சுரங்க நுழைவாயில் பகுதி வழியாக அவரது கார் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்றது. அங்கு விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.


இந்நிலையில் நடிகர் விஜய்யை காண  என்.எல்.சி முன்பு ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். படபிடிப்பு முடிந்து வெளியே வந்த நடிகர் விஜய்யை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக கையசைத்தனர். உடனே வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை நோக்கி கையசைத்து நடிகர் விஜய் செல்ஃபி எடுத்தார். அதன் பிறகு காரில் ஏரி சென்றார்.