கவுண்டமனி, செந்தில், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோருடன் சில படங்களில் நடித்து பிரபலமானவர் ஷர்மிலி. 90’ஸ் குழந்தைகளுக்கு இவரை நன்றாகவே தெரிந்திருக்கும். நடிகையாவதற்கு முன்னர் க்ரூப் டான்ஸராக இருந்தார். இவர், தற்போது தனது 48ஆவது வயதில் கர்பம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துணை நடிகை:


சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் பிரபல துணை நடிகையாகவும் நகைச்சுவை நடிகையாகவும் வலம் வந்தவர், ஷர்மிலி. தனது சினிமா வாழ்க்கையை குழுக்களில் நடனமாடும் நடனக்கலைஞராக ஆரம்பித்த இவர் அடுத்து மெல்ல மெல்ல கேமரா முன் வந்துவிட்டார். ‘ராக்காயி கோயிலிலே' படத்தில் வரும் லாட்டரி சீட்டு காமெடியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்படத்தில் இவர் கவுண்டமனிக்கு ஜோடியாக நடித்திருப்பார். பின்னர் அவருடன் 27 படங்களில் சேர்ந்து நடித்தார். பயில்வான் ரங்கநாதுடன் சேர்ந்து நடித்த “எல்லாம் மேலக இருக்கவன் பாத்துப்பான்..” காமெடி இன்றளவும் பலரை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இவர் தற்போது கர்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | விஜய்யுடன் கைக்கோர்க்கும் வெற்றிமாறன்? ‘வடசென்னை’ இயக்குநர் சொன்ன இனிப்பான தகவல்..!


48 வயதில் தாயான ஷர்மிலி:


நடிகை ஷர்மிலி, தனது 40ஆவது வயத்ல் ஐடி துறையில் பணிபுரியும் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவர், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த் நிகழ்ச்சியை, பிக்பாஸ் வனிதா தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சர்மிலியின் வாழ்க்கை குறித்தும் சினிமா அனுபவங்கள் குறித்தும் பல உரையாடல்கள் மற்றும் கேள்வி-பதில்கள் எழுந்தன. அப்போதுதான் சர்மிளி அந்த சீக்ரெட்டை போட்டு உடைத்தார். இவர் 48ஆவது வயதில் தனது முதல் குழந்தையை பெற்றெடுக்க உள்ளார். மேலும் தனது கணவர் தற்போது நீதிபதிக்கு படித்து கொண்டிருப்பதாகவும் ஷர்மிலி தெரிவித்தார். 


ரசிகர்கள் வாழ்த்து:


நல்ல குடும்பத்தை நடத்த வயது என்பது ஒரு தடையல்ல எனபதை ஷர்மிலி பலருக்கு உணர்த்தியுள்லதாக நிகழ்ச்சி தொகுப்பாளர் வனிதா அவரி பாராட்டினார். இந்த வீடியோ வெளிவந்தவுடன் சிலர் ஷர்மிலிக்கு வாழ்த்து செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 


சினிமா வாய்ப்புகளே இல்லை:


பிரபல நகைச்சுவை நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவர், தற்போது படங்களில் பெரிதும் நடிக்காமல் திரைத்துறையை விட்டு ஒதுங்கியே இருக்கிறார். யூடியூப் சேனலுக்கு கொடுத்திருந்த பேட்டியில் கவுண்டமனியுடன் சேர்ந்து நடித்ததால்தான் தான் பிரபலமானதாக குறிப்பிட்ட அவர், ஒரு கட்டத்திற்கு பிறகு அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார். இதனால் தனக்கு வேறு எந்த் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் ஆதங்கப்பட்டார். கவுண்டமனியும் இவருக்கு வந்த பல கதாப்பாத்திரங்களை கெடுத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். 


பட வாய்ப்பை கெடுத்த கவுண்டமனி:


ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த வீரா படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கவுண்டமனி கெடுத்துவிட்டதாக ஷர்மிலி கூறியிருக்கிறார். அப்படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு நடனமாட இவருக்கையில் அந்த வாய்ப்பை கவுண்டமனி கெடுத்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால் பல பத்திரிகையாளர்கள் “ஷர்மிலி நடித்தால் கவுண்டமனியுடன்தான் நடிப்பார்” என எழுத ஆரம்பித்தார்கள் என்றும் இதனாலும் தனக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனதாகவும் அவர் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | Keerthy Suresh: அரசியலில் நுழையும் கீர்த்தி சுரேஷ்..? அதுவும் இந்த கட்சியிலா..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ