நேரம், பிரேமம் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் இயக்குனர் அல்போன்ஸ் பத்திரம். சாதாரண கதையை வித்தியாசமாக படம் எடுப்பதில் இவர் வல்லவர். தற்போது ப்ரித்திவிராஜ் மற்றும் நயன்தாராவை வைத்து கோல்ட் (GOLD) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.  மலையாள சினிமா மட்டுமின்றி இந்திய திரை உலகில் உள்ள கதாநாயகன்களும் இவர் இயக்கத்தில் நடிக்க ஆவலாக உள்ளனர்.  சிறிது நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் மகனுக்கு ஒரு கதை கூறி உள்ளார்.  விஜய் தனது பேட்டியில் இந்த தகவலை கூறி இருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மீண்டும் வாடகை தாய் மூலம் குழந்தை பெறப்போகும் பிரியங்கா சோப்ரா?


இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் கமல்ஹாசனுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில் மருதநாயகம் படத்தின் வேலைகளை மீண்டும் தொடங்க வேண்டும், அதனை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். உங்களது ரசிகனாக, சினிமா காதலனாக வேண்டி விரும்பி இதனை கேட்டுக்கொள்கிறேன்.  உண்மையாக ஆழ் மனதில் இருந்து நினைத்தால் அதனை செய்து முடிக்க இந்த பிரபஞ்சமே உதவியாக இருக்கும். நீங்கள் இந்த பிரபஞ்சத்தின் ஹீரோ, உங்களால் முடியும் என்று பதிவிட்டு உள்ளார்.