பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதல் முறையாக ஐந்தாவது சீசனில் திருநங்கை நமீதா மாறிமுத்து போட்டியாளர்ராக வந்தார். முதல் வாரத்திலேயே அவர் மற்ற போட்டியாளர்களுக்கு பெரிய போட்டியாக  இருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் பிக்பாஸ் (Bigg Boss Tamil) வீட்டின் முதல் வாரத்தில் ஒவ்வொரு போட்டியாளர்களும் கடந்து வந்த பாதை என்ற போட்டியில் பங்கேற்றனர். இதில் தங்களின் வாழ்க்கையில் எதிர்கொண்ட சிக்கல்கள், போராட்டங்கள் குறித்து பேசியதில் நமீதாவின் (Namitha marimuthu) வாழ்க்கை பொதுவெளியில் பலருக்கும் அனுதாபத்தை தேடி தந்தது. சமூகவலைதளங்களிலும் நமீதா மாரிமுத்துவுக்காக ஆதரவு குரல்கள் எழத் தொடங்கியது. இந்த நேரத்தில் திடிரென உடல்நல குறைவு காரணமாக முதல் வாரமே நமீதா மாறிமுத்து வெளியேறினார்.


ALSO READ | பிக்பாஸ் ஐந்தாம் சீசனின் போட்டியாளர்களின் புகைப்படத் தொகுப்பு


உடனடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நமீதா, மருத்துவமனைக்கு சென்று ஒரு வாரமாக சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன்பின் வீடு திரும்பினார். தற்போது அவர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வாரா என்ற கேள்விகளை அவவ்போது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். 


இந்நிலையில் தற்போது நமீதா மாரிமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சாலையோரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு புதிய துணிகளை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நமீதா மாரிமுத்துவின் இந்த செயலுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அத்துடன் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


 



ALSO READ | Biggboss 5: பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை நமீதாவின் கண்ணீரும், கலைஞர் கருணாநிதியும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR