கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 4 (Bigg Boss Tamil) போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் ‘பாட்டி சொல்லை தட்டாதே’ என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க் இல் பாட்டி அர்ச்சனா வைத்திருக்கும் பத்திரத்தை திருட வேண்டும் என்பது சோம்-ரம்யாவுக்கு பிக்பாஸ் கொடுத்த வேலையை கச்சிதமாக இருவரும் செய்து முடித்தனர்.


 


ALSO READ | "தாதாவின்" வெளியேற்றத்திறக்கு பிறகு, பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு புதிய "பாட்டி" விளையாட்டு ஆரம்பம்! ...


இதற்கிடையில் அந்த பத்திரத்தை பாலாஜி திருட பிளான் செய்ததை கேபிரில்லா மூலம் ரம்யா தெரிந்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி அர்ச்சனா, குடும்பத்தினர் அனைவர் மீதும் சந்தேகப்பார்வையில் உள்ளார்.


இந்த நிலையில் இன்று ரம்யா திருடிய பத்திரத்தை பாலாஜி திருடி குப்பை தொட்டியில் மறைத்து வைக்கும்போது, அதனை ரம்யா பார்த்துவிட்டார். இதுகுறித்து பாலாஜியிடம் கேப்ரில்லா விசாரிக்க அதற்கு அவர் கேப்ரில்லாவிடம் ஆத்திரம் அடைகிறார். பத்திரத்தை பீரோவில் இருந்து எடுத்தது யார்? என ஆவேசமாக கேட்க, பீரோவில் இருந்து எடுத்த சோம்-ரம்யா குரூப் நமட்டு சிரிப்புடன் பாலாஜியின் சண்டையை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.


 


ALSO READ | பிக் பாஸ் பாலாவுக்கு ஆப்பு வைத்தது மிஸ்டர் இந்தியா அமைப்பகம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR