பரபரப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இந்த வார எவிக்ஷனில் இருவர் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யார் அந்த இரண்டு பேர்? இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் சீசன் 7:


ஆங்கிலத்தில் நடைப்பெற்று வரும்  பிக்பிரதர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை இந்தியாவில் ‘பிக்பாஸ்’ என்ற பெயரில் 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினர். இந்தியை தாண்டி வேறு எந்த மொழியிலும் நடத்தப்படாமல் இருந்த இந்த நிகழ்ச்சி, 2017ஆம் ஆண்டு முதல் தமிழ் உள்பட சில தென்னிந்திய மொழிகளில் நடத்தப்படுகிறது. இதில், தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 6 சீசன்களை முடித்து, 7வது சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி அடியெடுத்து வைத்தது. 


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், இதற்கு முன்னர் இல்லாத புது ரூல்ஸ்களும், புதுப்புது டாஸ்குகளும் நிகழ்த்தப்பட்டன. முந்தைய சீசன்களில் ஒரே வீட்டில் இருந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டார்-ஸ்மால் பாஸ் வீட்டார் என்று பிரிக்கப்பட்டனர். இதனாலேயே, போட்டி ஆரம்பித்த முதல் வாரம் பல பஞ்சாயத்துகள் எழுந்தன. இதையடுத்து, முதல் வாரமே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். இதுதான் ட்விஸ்ட் என்று நினைத்தால், இதை விட பெரிய ட்விஸ்டாக வாரா வாரம் டபுள் எவிக்ஷனும் நடைப்பெற்றது. அந்த வகையில், இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


டேஞ்சர் லிஸ்டில் இரண்டு முக்கிய போட்டியாளர்கள்..


பிக்பாஸ் போட்டியின் இந்த சீசனில் இரண்டு முறை வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள் நுழைந்தனர். முதல் வைல்டு கார்டில் நுழைந்த 5 பேரில் தற்போது இருவர் மட்டுமே உள்ளனர். இரண்டாவது வைல்டு கார்டில் நுழைந்த 2 பேரில் ஒருவர் மட்டுமே போட்டியில் உள்ளார். பிக்பாஸ் சீசுன் 7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது. ஆனால் தற்போதே இந்நிகழ்ச்சியில் 10க்கும் மேற்பட்டவர்கள் போட்டியாளர்களாக உள்ளனர். இதனால், இனி வரும் வாரங்களில் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த வாரம் மாயா, ரவீனா, நிக்ஸன், தினேஷ், விஷ்ணு, விஜய் வர்மா, மணிச்சந்திரா உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நிக்ஸன் மற்றும் ரவீனா இந்த வாரம் வெளியேற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | 55 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத எஸ்.ஜே.சூர்யா! காரணம் இதுதானா?


இறுதிப்போட்டிக்கான டிக்கெட்..


பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த வார டாஸ்குகள் அனைத்தும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டை வைத்து நிகழ்த்தப்படுகின்றன. இந்த டாஸ்குகளில் வெற்றி பெற்று யார் அதிக புள்ளிகளை பெற்றுள்ளனரோ, அவர்கள் இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது அதிக புள்ளிகளை பெற்றவராக விஷ்ணு உள்ளார். இதற்கான டாஸ்குகளில் அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா பங்கேற்பதில்லை. இவர்கள் இருவருக்கும் அந்த வாய்ப்பு காெடுக்கப்படக்கூடாது எனக்கூறி, பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் தெரிவித்ததால் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது. 


பலமான போட்டியாளர்கள்:


பிக்பாஸ் போட்டியில் பலர் பலமான போட்டியாளர்களாக கருதப்பட்டாலும், பல பஞ்சாயத்துக்களை சந்தித்து அதையும் தாண்டி வந்து சமாளிக்கும் திறமை சில போட்டியாளர்களுக்கு மட்டுமே உள்ளது. அதில் மாயா மற்றும் பூர்ணிமாவின் பெயர் அடிக்கடி அடிபட்கிறது. அது மட்டுமன்றி, விசித்ராவும் ஃபைனஸ் வரை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | விஜயகாந்தின் ‘இந்த’ புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ