பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil) 4 நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் கடுமையாக போட்டியிடத் தொடங்கியுள்ளதால் சுவாரஸ்யமானது. போட்டியாளர்களுக்கு டாஸ்க் கடினமான நேரத்தைக் கொடுத்தாலும், சமீபத்திய அத்தியாயங்களில் பல போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்டதால் உணர்ச்சி அதிகமாக இயங்குவதாகத் தெரிகிறது. இந்த பட்டியலில் சமீபத்திய பரோமோ வீடியோவில்  அர்ச்சனா (Archana Chandhokeஉணர்ச்சிவசப்பட்டுள்ளார். அந்த பரோமோவில் பாலாஜி (Balaji Murugadoss)கதறி அழுவது போல இருந்தது. அதற்கு அடுத்தது அர்ச்சனா கதறி அழுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்கிடையில் நேற்று பாலாஜி தூங்கிக் கொண்டிருந்த போது அர்ச்சனா அவரை எழுப்பி வீட்டை சுத்தம் செய்யச் சொன்னார். தன்னை தூக்கத்திருந்து எழுப்பியதால் பாலாஜி கடுப்பாகி அடுத்த வாரம் உங்கள் அனைவரையும் அம்மி அரைக்க வைக்கிறேன் என சொல்லி உள்ளார். இந்த விஷயம் பூதாகரமானது.


 


ALSO READ | Bigg Boss Tamil 4: வைல்டு கார்டு போட்டியாளராக நிகழ்ச்சியில் நுழையும் RJ-பாடகி?


ரியோ, வேல்முருகன், நிஷா, அர்ச்சனா உள்ளிட்டவர்கள் பாலாஜியிடம் வாக்குவாதம் செய்து எப்படி நீ அப்படி பேசலாம் என்று கேள்வி கேட்டனர். அதற்கு அசராமல் பதில் அளித்தார் பாலாஜி. அதோடு அதன் தொடர்ச்சியாக இன்று வெளியான பிரமோவில் மீண்டும் பாலாஜியை அர்ச்சனா, ரியோ உள்ளிட்டவர்கள் ரவுண்ட் கட்ட ஒருகட்டத்தில் கதறி அழுதுவிட்டார் பாலாஜி. 


இந்த நிலையில் இப்போது வெளியாகியுள்ள பிரமோ ஒன்றில், அர்ச்சனா, “நீ என்னை பிடிக்கவில்லை என்று சொன்னால் நான் எங்கே போவேன். நான் தொலைத்த மகனை உன்னுள் தேடுகிறேன். எனக்கு மகன் இல்லை. எனக்கு நீ மகனாக வேண்டும்.” என்று சொல்லி அழுகிறார். உடனே பாலாஜி அவரை அரவணைத்துக்கொண்டு சாரி (sorry) என்று கூறுகிறார். இதன்மூலம் இருவரும் சமாதானம் ஆகிவிட்டது தெரிகிறது. இதன் மூலம் இன்றைய லேட்டஸ்ட் எபிசோட் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


 


ALSO READ | Bigg Boss Tamil 4: வரவிருக்கும் நிகழ்வைப் பற்றி இதுவரை நாம் அறிந்தவை இங்கே


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR