கன்னட நடிகர் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழ் திரைப்பட நடிகர் விமல் மீது விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கன்னட நடிகரான அபிஷேக் வர்மா தமிழ் திரைப்படத்தில் ஒன்றில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர், சாலிகிராமம், பாஸ்கர் காலனியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி நடித்து வருகிறார்.


இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை அவர் தங்கி இருந்த விடுதி நுழைவாயில் பகுதியில் அமர்ந்திருந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு தமிழ் திரைப்பட நடிகர் விமல் தனது நண்பர்கள் 3 பேருடன் அங்கு சென்று அபிஷேக்கிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால், கோபம் அடைந்த விமல் நண்பர்களுடன் சேர்ந்து அபிஷேக் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.


இதில் அபிஷேக்கின் கை, கால், நெற்றி, கண் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 


தற்போது இந்த தாக்குதல் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வருமாறு நேரில் சென்றும் அழைத்தனர். ஆனால் சொன்னபடி போலீஸ் நிலையத்துக்கு அவர் வரவில்லை. இந்நிலையில் தற்போது நடிகர் விமலை போலீசார் தேடி வருகிறார்கள்.