தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் முதன்மையானவராக விளங்குபவர், தனுஷ். தற்போது கேப்டன் மில்லர் பட வேலைகளில் மும்முரமாக இருக்கும் இவர் நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்கள் வைரலானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேப்டன் மில்லர்:


‘சானி காயிதம்’ ‘ராக்கி’ போன்ற படத்தை இயக்கி மக்களின் கவனத்தை ஈர்த்த அருண் மாத்தீஸ்வரன், தற்போது தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில், தனுஷுடன் பிரியங்கா மோகன், ஜான் கொக்கன், சந்தீப் கிஷன் போன்ற பலர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு முதல் இப்படத்திற்கான வேலைகள் நடைப்பெற்று வருகின்றன. படத்தின் க்ளிம்ஸ் வீடியோ, தனுஷின் லிக் போன்றவை வெளியாகி ரசிகர்களின் பெறும் வரவேற்பினை பெற்றது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. கேப்டன் மில்லர் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் படம் உருவாகி வருகிறது. 


மேலும் படிக்க | ஃபைண்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட விஜய் சேதுபதி


திருப்பதியில் சாமி தரிசனம்..


நடிகர் தனுஷ், நேற்று காலை திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் அவரது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவும் சென்றுள்ளனர். தனுஷ், நேற்று சாமி கும்பிட்டுவிட்டு திரும்புகையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவின. அதில், தனுஷ் மொட்டைத்தலையுடன் இருந்தார். இதை அவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். 


புது லுக்?


தனுஷ், தற்போது நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்திற்காக நீண்ட தலைமுடியும், அதைவிட நீண்ட தாடியும் வைத்திருந்தார். கேப்டன் மில்லர் பட போஸ்டர் வெளியான பாேது அதில் இவரது முடி கொண்டை போட்டவாறு இருந்தது. இதையடுத்து சமீபத்தில் இவரது இன்னொரு போட்டோ வெளியானது. இந்த புகைப்படத்தில் தனுஷ் நீண்ட முடியுடன் இல்லை. தற்போது இவர் மொட்டை கெட்-அப்பில் இருக்கிறார். இந்த லுக், அவருடைய 50ஆவது படத்திற்கான லுக் ஆக இருக்குமோ என ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். ஒரு சில ரசிகர்கள், எல்லோரையும் போல தனுஷும் தனது மகன்களுடன் சென்று, திருப்பதி பெருமாளுக்கு நேர்த்திக்கடனாக முடியை காணிக்கையாக செலுத்தியிருப்பார் எனவும் கூறுகின்றனர். 


தனுஷின் 50ஆவது படம்..


தனுஷ், கேப்டன் மில்லர் படத்தை அடுத்து, தனது 50ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். கடைசியாக ‘பா.பாண்டி’ படத்தை இயக்கி அவர் மக்களின் வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து இந்த படத்திலும் இயக்குநராக களமிறங்குகிறார். இந்த படத்தில் தனுஷுடன் தமிழ் சினிமாவின் பல பிரபலமான நடிகர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. இந்த படம், கேங்க்ஸ்டர் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்துள்ள சந்தீப் கிஷன் இந்த படத்திலும் இவருடன் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமன்றி, உச்ச நடிகர் ஒருவரும் படத்தில் இருக்கிறாராம். 


இவர்தான் வில்லனா..?


நடிகர் எஸ்.ஜே சூர்யாவும் தனுஷின் 50வது படத்தில் இணைந்துள்ள நடிகர்களுள் ஒருவர் என ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர். எஸ்.ஜே சூர்யா, சில நாட்களுக்கு முன்னர் தான் நடித்துள்ள ‘பொம்மை’ பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது, தான் வில்லனாக நடித்து வரும் சில படங்களின் பெயர்களை சொன்னார். கடைசியாக ஒரு பெரிய படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் கூறினார். அந்த பெரிய படத்தை எல்லோரும் இந்தியன் 2 படம் என நினைத்து விட்டனர். ஆனால், அது தனுஷின் 50 வது படமாக இருக்கும் என்பதை சிலர் கணித்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | எம்.ஜி.ஆர் வழியில் செல்லும் விஜய்..? சினிமாவை விட்டு விலகி சட்டமன்ற தேர்தலில் போட்டியா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ