இந்தியா முழுவதிலும் சினிமாவின் மோகம் நிறைந்துள்ளது.  பலரும் படங்கள் பற்றிய அப்டேட், கிசுகிசுக்கள் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர்.  தென்னிந்தியா, பாலிவுட், கோலிவுட், சாண்டல்வுட், டோலிவுட் என பல மொழிகளில் சினிமா உள்ளது. பாலிவுட் முதல் டோலிவுட் வரை பல ஆண்டுகளாக அதிக பணம் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டார்களை கொண்டிருக்கிறது. பெரும்பாலும் நடிகர், நடிகைகள் பணம் சம்பாதிக்க ஒரு படத்திற்கு அதிக சம்பளம், பிராண்ட் ஒப்பந்தங்கள், பட தயாரிப்பு மற்றும் தொழில்கள் மூலம் லாபம் சம்பாதிக்கின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கமல்ஹாசனின் ஆபிஸ் ரூமை பார்த்துள்ளீர்களா..? ‘இந்த’ வீடியோவில் பாருங்கள்! 


இந்தியாவின் பணக்கார நடிகராக ஷாருக் கான் உள்ளார். அவற்றின் நிகர சொத்து மதிப்பு $735 மில்லியன் ஆகும். தென்னிந்தியாவிலும் இதே போன்ற பணக்கார நடிகர் உள்ளார். முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகார்ஜுனா, ஜூனியர் என்டிஆர், ராம் சரண், தளபதி விஜய் போன்றவர்கள் அதிகபடியான சம்பளம் வாங்குகின்றனர்.  ஆனால், இவர்களை தாண்டி மெகா ஸ்டார் சிரஞ்சீவி அதிக சொத்து வைத்துள்ளார்.  அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 200 மில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக உள்ளவர் அவரது மகன் ராம் சரண்.  இவரது படங்கள் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அங்கும் வியாபாரம் ஆகிறது.  RRR படத்தில் நடித்து ஹிந்தி திரையுலகிலும் கால்தடத்தை பதித்து உள்ளார் ராம் சரண்.  இவரது சொத்து மதிப்பு $175 மில்லியன் ஆகும்.


அடுத்தபடியாக ஆண்டு வருமானம் $100 மில்லியனுக்கு மேல் இருக்கும் தென்னிந்தியாவில் மூன்றாவது நடிகர்  நாகார்ஜுனா. 2023ல் நாகார்ஜுனா நிகர மதிப்பு சுமார் $123 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது மகன் நாக சைதன்யாவும் டோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக உள்ளார்.  மேலும், இந்தியாவின் முதல் 20 பணக்கார நடிகர்களில், தென்னிந்தியாவை சேர்ந்த மற்ற நடிகர்களாக ஜூனியர் என்டிஆர், தளபதி விஜய் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் உள்ளனர். அவர்களின் நிகர மதிப்பு முறையே $60 மில்லியன், $56 மில்லியன் மற்றும் $55 மில்லியன் ஆகும். இந்தப் பட்டியலில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் மற்றும் கரீனா கபூர் கான் ஆகியோர் முறையே $75 மில்லியன், $60 மில்லியன் மற்றும் $60 மில்லியன் என மூன்று நடிகைகளும் இடம்பெற்றுள்ளனர்.


தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக தற்போது விஜய் உள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம்தயாரிக்கும் தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரே படத்தில் இருந்து இவ்வளவு பெரிய சம்பளம் வாங்கிய இரண்டாவது இந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றார் விஜய். இதற்கு முன் டங்கல் (2016) படத்திற்காக பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ரூ. 265 கோடி - ரூ. 300 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.  ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்கனவே விஜய்யை வைத்து பிகில் படத்தை தயாரித்து இருந்தது.  அந்த பதில் விஜய்க்கு 50 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யாவிற்கு பதில் ‘இவர்’ நடிக்க இருந்தார்! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ