Seetha Raman Serial Today Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர், 'சீதா ராமன்'. இந்த சீரியலின் இன்றைய (ஏப். 28) எபிசோடில் மகாலட்சுமியிடம் சவால் விட்ட சீதா, அடுத்து என்ன செய்வது என யோசித்து கொண்டிருக்கிறாள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீரா - சத்யன் திருமணம்


மறுபக்கம் மகாலக்ஷ்மி கோபமாக இருக்க அப்போது எல்லோரும் ஒன்று சேர சீதா, சத்யன் மற்றும் மீராவுக்கு கல்யாணம் செய்து வைக்க போகும் விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.  இதெல்லாம் எப்படி நடந்தது என அனைவரும் கேட்க,'மகா இப்போ அதுவா முக்கியம், சீதா இந்த டாக்குமென்டுகளை கிழிச்சி போட்டுட்டா அதுக்கு என்ன பண்றது' என கோபப்படுகிறாள். 


அதற்கு அடுத்தாக மீரா சீதாவிடம் சென்று,'உனக்கு இந்த ஷேர் விஷயமெல்லாம் எப்படி தெரியும்' என கேட்க அப்போது துரை, அங்கு வந்து 'நான் தான் சொன்னேன், நான் இந்த மாதிரி நடக்க போகுதுனு தான் சொன்னேன், மீதி எல்லாத்தையும் கண்டு பிடித்தது சீதா தான்' எனவும் சொல்கிறான். 



மன்னிப்பு கேட்க சொன்ன அர்ச்சனா


பிறகு, 'சீதா எனக்கு எல்லாத்தையும் சொன்னது சத்யன் தான்' என சொல்ல, 'அவர் நம்பர் உனக்கு எப்படி கிடைத்தது' என மீரா கேட்டாள். அதற்கு,'எல்லாம் உங்க போன்ல இருந்து தான் எடுத்தேன்' என பதில் சொல்கிறாள், சீதா. 


மேலும் படிக்க | அமுதாவும் அன்னலட்சுமியும்: எறிந்த நிலையில் செந்திலின் துணிகள்.. நடந்தது என்ன?


இன்னொரு பக்கம் மகா சீதாவை அடக்க, ராமால் மட்டும் தான் முடியுமென சொல்ல அர்ச்சனா ராமை அழைத்து வர மகா, சீதா பத்திரத்தை கிழித்து போட்ட விசயங்களை சொல்கிறாள். மேலும், 'அந்த சீதா என்னிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்' என கோபமாக பேசுகிறாள்.


ராம் பேச்சை கேட்காத சீதா


இதனால் ராம், சீதாவிடம் வந்து சித்தியிடம் மன்னிப்பு கேள் என சண்டையிடுகிறான். சீதா,'நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும், அதெல்லாம் கேக்க முடியாது. நான் உங்களுக்கு நல்லது தான் செய்தேன்' என பதிலடி கொடுக்கிறாள்.  



அடுத்ததாக ராம், மீராவிடம் சென்று சித்தியிடம் மன்னிப்பு கேட்க சொல்ல அவளும் மறுப்பு சொல்கிறாள். இதனால் ராம் என்ன செய்வது என தெரியாமல் தவிக்க அர்ச்சனா, 'உனக்கு உன் சித்தி மேல மரியாதை இருந்தால், நீ அவங்களை மன்னிப்பு கேட்க வைத்தே ஆக வேண்டும், அதுக்கு நான் ஒரு வழி சொல்றேன்' என எதையோ சொல்கிறாள். 



ராம் தற்கொலை ?


இதனையடுத்து ராம் மொட்டை மாடியில் ஏறி நின்று சீதா சித்தியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று மறக்காமல் பாருங்கள். இந்த தொடரை நீங்கள் Zee 5 தளத்திலும் சந்தா செலுத்தி பார்க்கலாம்.


மேலும் படிக்க | தெய்வம் தந்த பூவே அப்டேட்: வினய், மித்ரா இடையே மீண்டும் மோதல், நடக்க போவது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ