Meera Mithun News: வாய் தவறி பட்டியலின மக்களை தவறாக பேசிவிட்டேன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார் மீரா மிதுன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 (Bigg Boss 3) நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர் மீரா மிதுன் (Meera Mitun). மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு என அழகிப் போட்டிகளில் பட்டம் வென்றவர் நடிகை மீரா மிதுன். சில படங்களில் சிறு காட்சிகளில் மீரா மிதுன் நடித்திருக்கிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்களை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டார். இதனால் இணையத்தில் மீராமிதுன் எதிராக வலுவான கண்டனம் எழுந்தது.   பலமுறை ஏடாகூடமாக பேசி மாற்றிக் கொள்வார் மீரா மிதுன்.


இதற்கிடையில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பேசி வீடியோ வெளியிட்ட மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனையடுத்து மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சமீபத்தில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் மீரா மிதுன் போலீசில் ஆஜராகாத நிலையில் கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில் தற்போது  மீரா மிதுன் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் அட்டவணை சாதி மற்றும் பட்டியல் பழங்குடி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


ALSO READ | Meera Mithun Case: மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை


தற்போது, வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைதாகியுள்ள நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.  என்னை பற்றி அவதூறாக பேசியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியபோது வாய் தவறி பட்டியல் இன மக்களை தவறாக பேசிவிட்டேன் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு நடிகை மீரா மிதுன் மனு தாக்கல் செய்துள்ளார்.   மேலும் பல படங்களுக்கு கால்சீட் கொடுத்து உள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் எனவும் ஜாமீன் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR