நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் -பிரபல பாடகி!
தான் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்திருந்தும் பாடகர் ஜாபர் அலி தனக்கு பாலுயல் தொல்லை கொடுப்பதாக பாகிஸ்தான் பிரபல பாடகியும் நடிகையுமான மீஷா ஷாஃபி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்...!
தற்போது நாடு முழுவதையும் உலுக்கிக் கொண்டிருக்கும் சம்பவம் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது. இதைதொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது. பெண் திரை பிரபலங்களுக்கும் சினிமாவில் என்னென்ன நடக்கிறது என்ற விவரம் இப்போது தான் வலைதளங்களில் அதிகம் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தான் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்திருந்தும் பாடகர் ஜாபர் அலி தனக்கு பாலுயல் தொல்லை கொடுப்பதாக பாகிஸ்தான் பிரபல பாடகியும் நடிகையுமான மீஷா ஷாஃபி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் #Me Too ஆஷ் டேக்கை பயன்படுத்தி என் சக பாடகர் அலி ஜாபர் எனக்கு ஒன்று அல்ல பல முறை எண்ணெய் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது நான் இந்த துறைக்கு வந்த புதிதிலோ அல்லது இளம் பருவத்திலோ நடக்கவில்லை. நான் பிரபலமான பிறகு, இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பிறகு நடந்துள்ளது என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.