சுயமரியாதைக்கு பங்கம் வந்துவிட்டதால் லக்ஷ்மிபாம் படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


 


ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா.
தமிழ் சினிமாவில் இன்று பார்ட்-2 சீசன் மற்றும் பேய் சீசன் டிரெண்டாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த படம் தான்.


தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை லக்ஷ்மிபாம் எனும் பெயரில் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். அக்ஷய் குமார் இதில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அக்ஷய்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.


இந்நிலையில் லக்ஷ்மிபாம் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குனர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். மதியாதார் தலைவாசல் மிதியாதே எனும் தமிழ் பழமொழிக்கு ஏற்ப இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.