மும்பை: பாலிவுட்டின் நாயகி கரீனா கபூருக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் கரீனாவுக்கு இன்று காலை 7.30 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ​


கரீனாவின் நண்பரும் இயக்குனருமான கரன் ஜோகர் நேரில் சென்று பார்த்த பிறகு குழந்தையின் பெயரை 'தைமர் அலி கான்' என்று அறிவித்திருக்கிறார்.


 



 


தைமரை வருகையை கொண்டு, சைஃப் மூன்றாவது முறையாக தந்தை ஆனார். இப்ராஹிம் அலி கான் மற்றும் சாரா அலி கான் என இரண்டு குழந்தைகள் ஏற்கனவே சைஃப்புக்கு உள்ளனர். இந்த இரண்டு குழநத்தைகளும் அம்ரிதா சிங் மற்றும் சைஃப்புக்கு பிறந்தவர்கள்.