தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரம்யாவிடம் என்னால பெங்களூருக்கு வர முடியாது என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது வீட்டில் தீபா அண்ணி மைதிலியிடம் கோபமாக பேசி வெளியே அனுப்ப கார்த்திக் ரூமுக்குள் வந்து நிற்க தீபா அது பிரம்மை என நினைத்து எனக்கு உங்கள் ஞாபகமாகவே இருக்கு என்று பேச நான் தான் உங்க முன்னாடி வந்து நிற்கிறேன் என்று கார்த்திக் சர்ப்ரைஸ் கொடுக்கிறான். 


கோவிலுக்கு செல்லும் தீபா, கார்த்திக்


உடனே தீபா எனக்காக நீங்க பெங்களூர் போலயா அப்படின்னு கோவிலுக்கு கூட்டிட்டு போங்க என்று சொல்ல கார்த்திக் அவளை கோவிலுக்கு அழைத்துச் செல்கிறான். இருவரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட ரம்யா இதை அனைத்தையும் வெளியில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறாள். 



அதன் பிறகு இவர்கள் கோவிலில் இருந்து வெளியே வந்ததும் கார்த்திக்கு தெரிந்த ஒருவர் அவரைப் பார்த்து பேச தீபா பழக்கடை அருகே வந்து நிற்க அப்போது யாரோ ஒருவன் ஒரு லெட்டரை கொண்டு வந்து கொடுக்கிறான். தீபா அதைப் பிரித்துப் பார்க்க உன் புருஷன் உயிருக்கு ஆபத்து என்று எழுதி இருக்க அதிர்ச்சி அடைகிறாள். 


அந்த நேரம் பார்த்து இளநீர் கடைக்காரர் கார்த்தியை பார்த்து கையில் கத்தியுடன் தீபா பதறி போய் கார்த்திகை பிடித்து தள்ளிவிட்டு உங்களை கொல்ல வரான் என்று சொல்கிறாள். நான் இளநீர் கடைக்காரன் இளனி வெட்ட தான் வந்தேன் என்று சொல்ல கார்த்திக் அவரை அனுப்பி வைக்கிறான். 


உங்க உயிருக்கு ஆபத்து: தீபா


தீபா உங்க உயிருக்கு ஆபத்துன்னு ஒரு லெட்டரை ஒருத்தன் வந்து குடுத்துட்டு போனான் என்று சொல்லி அந்த பேப்பரை கொடுக்க அதில் எதுவும் இல்லாமல் இருக்க தீபா அதிர்ச்சி அடைகிறாள். பிறகு வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்ல அபிராமி தீபா ஏதோ அப்செட்டாகவே இருக்கா என்று சொல்கிறாள். 


இருப்பினும் கார்த்தியை நம்பும் தீபா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தன்னுடைய நண்பனிடம் நடந்த விஷயத்தை சொல்ல அவர் எனக்கு தெரிஞ்ச பாரன் சீக் டிபார்ட்மெண்ட் பிரண்டு ஒருத்தன் இருக்கான் அவன் கிட்ட கொடுத்து பார்க்கலாம் என்று சொல்லி கொடுக்க அதை பரிசோதனை செய்து பார்க்க மேஜிக் பெண்ணால் எழுதி இருப்பது தெரிய வருகிறது. 


மேலும் படிக்க | வெற்றிப்படம் என்றாலும் திருப்தி இருக்க வேண்டும் - தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ்!


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?


கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | கல்கி 2898 கிபி படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ