நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கேரள நடிகர் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திலீப்பின் மனைவி காவ்யா மாதவனின் பேஸ்புக் பக்கத்தில் சிலர் மோசமான கமென்ட்டுகளைப் பதிவு செய்து வந்தனர். இதனால் ஃபேஸ்புக் பக்கத்தை டி-ஆக்டிவேட் செய்திருக்கிறார். 


இன்னொரு புறம் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திலீப்புக்கு எதிராக மீம்ஸ்கள் போட்டுவருகிறார்கள். 


கைதுசெய்யப்பட்ட திலீப், அலுவா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்கு வெளியே கூடியிருந்த மக்கள், திலீப்புக்கு எதிராக கோஷம் போட்டனர். மேலும் அங்கமாலி கோர்ட் நீதிபதி இல்லத்தில் நடிகர் திலீப் உடனடியாக ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.