சென்னை: ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் பேரணிகள் நடந்து வரும் நிலையில் கொம்புவச்ச சிங்கம்டா என்ற பாடலை நாற்று இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது டிவிட்டார் பாகத்தில் வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. 


ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் குரல்கள் எழுகின்றன. ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கக் கோரி தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறனர். 


இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை வெளியிட்டார். கொம்புவச்ச சிங்கம்டா என்ற பாடலை எழுதியிருப்பவர் அருண்ராஜா காமராஜ், இசையமைத்திருப்பவர் ஜி.வி. பிரகாஷ். 


இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.