சில நாட்களுக்கு முன்பு, மலையாள நடிகை பாவனாவுக்கு, அவரது முன்னாள் கார் டிரைவர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் சேர்ந்து, ஓடும் காரில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் கார் டிரைவர் மற்றும் சிலரால் கடத்தில் மானபங்கப்பட்டுத்தப்பட்ட நடிகை பாவனாவுக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.


தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிரபல கதாநாயகியாக இருப்பவர் பாவனா. மலையாளத்தில் இன்று முன்னணி நடிகை அவர்தான். சில தினங்களுக்கு முன் பாவனா ஷூட்டிங்கிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது முன்னாள் ட்ரைவர் சுனில்குமார் திட்டமிட்டு ஆள் வைத்துக் கடத்தி, காரிலேயே 2 மணி நேரம் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.


இந்த சம்பவத்தைக் கண்டித்து, மலையாள நடிகர்கள் கேரளத் தலைநகர் கொச்சியில் ஒன்றுகூடிப் போராட்டம் நடத்தினர். 


குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர்கள் கேட்டுக் கொண்டனர். 
இந்தப் போராட்டத்தில், முன்னணி நடிகர்கள் மம்மூட்டி, திலீப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை, பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் மற்றும் இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.