பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர் சென்றாயனை மஹத் மற்றும் நடிகர் சிம்பு வரவேற்றுள்ளனர்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியிலிருந்து இது வரை மமதி, அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம், நித்யா, மஹத், டேனியல், சென்றாயன் உள்ளிட்ட 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் அனந்த்ஜி, ரம்யா, வைஷ்ணவி, நித்யா என 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த ‘பிக் பாஸ் 2’ தற்போது டேனியல் வெளியேற்றத்திற்கு பின் 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். 


இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் சென்றாயன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்டுத்தியது. மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை என்பதால் தான் சென்றாயன் வெளியேற்றப்பட்டார் என்று கமல் விளக்கம் அளித்தார். எனினும் இந்த விளக்கத்தை பெரும்பாலான பிக்பாஸ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 


இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர் சென்றாயனை மஹத் மற்றும் நடிகர் சிம்பு வரவேற்றுள்ளனர். அப்போது நடிகர் சென்றாயனுக்கு நடிகர் சிம்பு "திருமூலரின் திருமந்திரம்" என்ற நூலை பரிசாக கொடுத்துள்ளார்....!. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் மஹத் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இந்தப்புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது....!