ஜோதிகா நடிப்பில் தயாராகியுள்ள "மகளிர் மட்டும்" திரைபடம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"மகளிர் மட்டும்" ஜோதிகா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் தமிழ் நாடக திரைப்படம். குற்றம் கடிதல் திரைபடத்திற்கு தேசிய விருது பெற்ற பிராம்மா எழுதி இயக்குகிறார். ஜோதிகா முன்னணி கதாபத்திரத்தில் நடிகின்றார். சரண்யா, ஊர்வாஷி, பானுப்ரியா, நாசர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 


படம் ரிலீசுக்கு தயாரிக்கிற நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக `மகளிர் மட்டும்' படக்குழு போட்டி ஒன்றை நடத்தியிருக்கிறது. 


பொதுவாக `மகளிர் மட்டும்' என்றாலே பெண்கள் மட்டும் பங்கேற்பார்கள். ஆனால் இதில் ஆண்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும்.