‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற படத்திற்கு சொந்தக்காரர் நயன்தாரா. தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். மலையாள நடிகையான இவர், தமிழில் 2005ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ படம் மூலம் கோலிவுட்டிற்குள் நுழைந்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், சினிமாவை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொகுப்பாளினி டூ நடிகை..


கேரள மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா அங்கு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தார். மெல்ல படங்களில் நடிக்கத்தொடங்கி தமிழ் திரையுலகிற்குள்ளும் பிரவேசித்தார். இவருக்கு ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து வந்தவை எல்லாமே ஏற்றம்தான். தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்கள் இவருடன் சேர்ந்து நடித்து விட்டனர். இவர் கடந்த ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.


மேலும் படிக்க | Actress Sharmili: 48 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கும் பிரபல நடிகை...!


திருமணம்-குழந்தைகள்:


பல ஆண்டுகளாக திரையுலகில் உள்ள நயன்தாரா சில திரைப்பிரபலங்களுடன் காதல் வலையில் விழுந்து பின்பு அதிலிருந்து மீண்டு எழுந்து வந்தார். 2015ஆம் ஆண்டு வெளியான நானும் ரௌடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் போது இவருக்கும் நயன்தாராவிற்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து, இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கடந்த டிசம்பர் மாதம் சர்ரகஸி முறையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகினர். 


சினிமாவை விட்டு விலகுவதாக தகவல்..


பொதுவாகவே தமிழ் நாயகிகள் திருமண பந்தத்தில் இணைந்துவிட்டால் அவர்கள் சினிமாவை விட்டு விலகுவதாக தகவல் பரவுவது வழக்கம். இப்படி, நயன்தாராவிற்கும் திருமணம் ஆன புதிதில் தகவல்கள் வெளியானது. ஆனால் அவை வெறும் தகவல்களாக மட்டுமே இருந்தன. ஆனால் இந்த தகவல்கள் தற்போது தீவிரமடைந்தள்ளன. நயன்தாரா மொத்தமாக சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு சுயதொழிலில் இறங்க உள்ளதாக புதிதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 


சுயதொழிலில் இறங்கிய நயன்:


நயன்தாரா திரைத்துறையில் சம்பாதிக்கும் பணத்தை வெவ்வேறு தொழிலில் முதலீடு செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் இவர் சென்னையில் உள்ள பழைய தியேட்டர் ஒன்றை வாங்கியுள்ளதாகவும் அதை புதுப்பித்து மல்டிஃப்ளக்ஸ் தியேட்டராக மாற்றவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. தனது கணவருடன் சேர்ந்து ரௌடி பிக்சர்ஸ் எனும் பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நயன் நடத்தி வருகிறார். இது மட்டுமன்றி, இயற்கை முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதன பொருளான லிப் பாமையும் பிசினஸாக மாற்றியுள்ளார். 


கேரளாவில் சுயதொழில்...


இப்படி அடுக்கடுக்காக தொழில் செய்து வரும் நயன்தாரா, தற்போது புதிதாக கேரளாவில் ஒரு சுய தொழிலை தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் பல வீட்டு மனைகளை வாங்கியிருக்கும் நயன், இதிலிருந்து ரியல் எஸ்டேட் தொழிலையும் ஆரம்பிக்க உள்ளார். இந்த தொழிலில் அவர் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளாராம். 


நயன்தாராவின் அடுத்தடுத்த படங்கள்..


நயன்தாரா, அட்லி இயக்கத்தில் நடித்துள்ள ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. இதில், இவர் இந்தி நடிகர் ஷாருக்கானுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். ஜெயம் ரவியுடன் நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம், இறைவன். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது. ஆகஸ்டுமாதம் ரிலீஸாக உள்ள இந்த படம், ஹாரர்-த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | சாலை விபத்தில் ஒரு காலை இழந்த பிரபல நடிகர்..! என்ன நடந்தது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ