நீதித்துறை மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எனக்கு எந்தவொரு தீங்கும் ஏற்படாது என்று தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபிகா படுகோண், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகோயோர் நடிப்பில் உருவான திரைப்படம் "பத்மாவதி". இந்த படத்தில் சர்ச்சைகுரிய காட்சிகள் இருப்பதாக கூறி, இந்த படத்தை திரையிடக்கூடாது என ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.


அதேவேளையில், இத்திரைபடத்தில் சில சர்ச்சைகுரிய காட்சிகளை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.சர்மா மனு தாக்கல் செய்துள்ளார். ஏ.ஆர்.ஐ படி, இந்த மனுவை ஒரு வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை தீபிகா படுகோன், நீதித்துறை மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எனக்கு எந்தவொரு தீங்கும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.