தமிழில் சில படங்களில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். தன்னை பத்திரிகையாளர் என கூறிக்கொள்ளும் அவர் சினிமா நடிகைகள் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவ்ம் பேசுவதை வாடிக்கையகா வைத்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரைப் பொறுத்தவரை அவர் கூறுவதுதான் உண்மை எனவும், தன்னை எதிர்த்து கேட்க எவருமே இல்லை என நினைத்துக்கொள்பவர். அதுமட்டுமின்றி தான் எம்ஜிஆர் காலத்திலிருந்து இருப்பவன். அதனால் தமிழ் சினிமா குறித்தும், அதில் பணியாற்றுபவர்கள் குறித்தும் தனக்கு அனைத்தும் தெரியும் என வெளியில் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்.


ஆரம்பத்தில் அளவோடு பேசிய ரங்கநாதன் சமீபகாலமாக மிகவும் கொச்சையாக, கீழ்த்தரமாக பேசிவருகிறார். கோலிவுட்டில் யாருக்கேனும் விவாகரத்து நடந்தால், அந்த தம்பதிக்குள் என்ன நடந்தது என்றே தெரியாமல் அவர்கள் அருகில் இருந்ததுபோல் பேசுவார்.



அவரது பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர். மேலும் சினிமாவின் மூத்த உறுப்பினர்களும், பத்திரிகையாளர்களும் அவரை கண்டித்து வைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.


இதற்கிடையே அவர் மீது காவல் துறையில் புகாரும் அளிக்கப்பட்டது. ஆனாலும் பயில்வான் ரங்கநாதன் தனது அவதூறு பேச்சுக்களை நிறுத்தவில்லை.


சமீபத்தில்கூட பாடகி சுசித்ரா குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தன்னை குறித்து அவதூறாக பேசிய ரங்கநாதனை தொடர்புகொண்டு சுசித்ரா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.



அந்த ஆடியோவில் சுசித்ரா, “உங்களுடைய தற்போதைய வீடியோ பார்த்தேன் அதில் என்னை பைத்தியம், போதைக்கு அடிமை, யார் எது கேட்டாலும் செய்வேன் என கூறியுள்ளீர்கள்? இதற்கு ஏதாவது ஆதாரம் உங்களிடம் உள்ளதா?என்னை பற்றி மிகவும் அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசியிருக்கிறீர்கள்.


நீங்கள் லேட்டஸ்டாக ஒரு வீடியோ பதிவு செய்துள்ளீர்கள். அதில் தனுஷ் விவாகரத்து தொடர்பாக மறுபடியும் குத்தி குதறியிருக்கிறீர்கள். அந்த வீடியோவை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். சுசித்ரா முழு பைத்தியம், ஹோட்டலுக்கு சென்று காட்டு கத்து கத்துவாங்க, கார்த்திக் குமார் பாவம் அவர்தான் காப்பாற்றினார், இருந்தாலும் சுசித்ரா முழு பைத்தியம் ஆகிவிட்டதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளீர்கள்.


மேலும் படிக்க | தூங்க சொன்ன பாடகி - வைரலாகும் ஏ.ஆர். ரஹ்மானின் பதில்


உங்களை கைது செய்ய வேண்டும் என சுசித்ரா தனது நியாயமான கோபத்துடன் பேசியிருக்கிறார். அதற்கு பதிலளித்த பயில்வான் ரங்கநாதன், பத்திரிகையில் வந்ததைத்தான் சொல்லியிருக்கிறேன். உங்கள் கருத்தை சொல்லுங்கள் அதனையும் பதிவு செய்கிறேன் என மழுப்புகிறார். 


தற்போது இந்த ஆடியோ வைரலாகியுள்ளது. மேலும் இதுபோல் பேசினால்தான் பயில்வான் ரங்கநாதன் அடங்குவார் எனவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.


மேலும் படிக்க | விக்ரமில் மிரட்டிய Agent Tina: விஜய், அஜித்கூடவும் வொர்க் பண்ணிருக்காங்களா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR