பிட் காயின் முறைகேடு தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கி, கடந்த வருடம் இறுதியில் பிட் காயின்  பயன்படுத்த கூடாது என எச்சரித்திருந்தது. அதையும் மீறி  இந்தியாவில் சிலர் பிட் காயின் உபயோகப்படுத்தி வந்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின்  கணவர் ராஜ்குந்த்ரா தொழிலதிபராக உள்ளார். அண்மைக் காலமாக அவர், பிட்காயின் எனப்படும் மெய்நிகர் கரன்சி முறைகேட்டில்  ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. 


இதையடுத்து, பிட் காயின் மோசடி தொடர்பாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், தொடர்ந்து ரகசிய கண்காணிப்புக்கு பிறகு மும்பை உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.