கடந்த மாதத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜின்காந்த் முடிவு செய்தார். ஆனால் சில காரணங்களால் அந்த நிகழ்சி திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. அதற்கான விளக்கத்தையும் அப்பொழுது ரஜினி கூறியிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ரசிகர்களை சந்திக்க ரஜினி நாள் ஒதுக்கி உள்ளார். அதாவது வரும் 15-ம் தேதி முதல் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். அந்த சந்திப்பின் போது ரசிகர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


மேலும் முதல் கட்டமாக 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பு 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறும்.