நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், அவரது கணவர் அஸ்வினுக்கும் பரஸ்பரம் விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2010-ம் ஆண்டு சௌந்தர்யாவு மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும்  திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.


கடந்த சில மாதங்களாக சௌந்தர்யாவுக்கும், அவரது கணவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.


இந்நிலையில், கடந்த 2016 டிசம்பர் மாதம் சௌந்தர்யாவும் மற்றும் அவரது கணவர் பரஸ்பரம் விவாகரத்து கோரி  சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். 


இந்நிலையில், நீதிபதி மரியா கிளட் நேற்று சௌந்தர்யா மற்றும் அஸ்வினுக்கு பரஸ்பரம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.