சூர்யா தற்போது பாண்டிராஜுடன் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து வருகிறார்.  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா, சத்யராஜ் போன்றவர்கள் நடிக்கின்றனர்.  இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கியமான காட்சிகளை படக்குழு எடுத்து முடித்துள்ளது.  இருப்பினும் படப்பிடிப்பு முடிந்து விட்டதா இல்லையா என்பதை படக்குழு இன்னும் அறிவிக்காமல் உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.  இந்த அறிவிப்பு வெளிவராமல் இருக்க காரணம், இன்னும் படத்தில் ஒரு பாடல் காட்சி மீதம் உள்ளதாக கூறப்படுகிறது. 


ALSO READ  Viral: ரத்தக்கறையுடன் விஜய்; லீக்கானது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு வீடியோ


இந்த பாடல் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.  மேலும், விரைந்து முடிப்பதற்காக நடன ஒத்திகையும் நடைபெற்று வருகிறது.  படத்தின் நாயகி பிரியங்கா அதற்க்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  பாடலின் படப்பிடிப்பு தீபாவளிக்கு பிறகு நடக்கும் என்றும் மற்றும் அதற்க்கான செட் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.  விரைவில் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.  



தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை பற்றி பேசும் படமாக எதற்கும் துணிந்தவன் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சூர்யா ஜெய் பீம் படத்தின் வெளியீட்டு வேலைகளில் பிஸியாகி உள்ளார்.  இப்படம் நவம்பர் 2ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. 


ALSO READ Beast Update: நடிகர் விஜய்க்கு அம்மாவாகும் செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR