நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக அறிவித்து சுமார் ஓராண்டுக்களுக்கு மேல் ஆனாலும், அவர்களைப் பற்றிய வதந்திகளுக்கு இன்னும் முடிவு வந்ததாக தெரியவில்லை. காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவரும், தங்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட மனக்கசப்பு காரணமாக மனம் உவந்து பிரிவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து சமந்தாவும், நாகசைதன்யாவும் அவரவர் பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நயன்தாரா முதல் சமந்தா வரை ஹனிமூனுக்கு சென்ற இடங்கள்


நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பிஸியாக  பல மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் அண்மையில் வெளியானது. நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். படங்களில் பிஸியாக இருக்கும் சமந்தாவைச் சுற்றி வதந்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, அவரது முன்னாள் கணவரான நாகசைதன்யாவுடன் இணைத்து வதந்திகள் பரப்பப்படுகின்றன.



அதாவது நாகசைதன்யா தற்போது மாடல் அழகியும் நடிகையுமான ஷோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நாகசைதன்யா மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாக சமந்தாவின் பி.ஆர் டீம், தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருப்பதாக சமூக வலைதளங்களில் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், நாகசைதன்யாவின் ரசிகர்கள் சமந்தாவை விமர்சித்து வருகின்றனர். 



இதனால் கொந்தளித்துள்ள நடிகை சமந்தா, டிவிட்டரில் அவர்களை கடுமையாக விளாசியுள்ளார். தன்னுடைய ரியாக்ஷனில் "ஒரு பெண் மீது வதந்தி வந்தால் உண்மையாக இருக்கும், அதுவே ஒரு ஆண் மீது வதந்தி வந்தால் ஒரு பெண்ணால் சதி செய்யப்பட்டிருக்கும் என நீங்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. வளருங்கள்... உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் சமந்தப்பட்டவர்கள் இருவரும் பிரிந்து சென்று அடுத்த வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். 



மேலும் படிக்க | நயன் ஹனிமூன் எங்கே தெரியுமா?... விக்னேஷ் சிவன் பகிர்ந்த வீடியோ


நீங்களும் அங்கிருந்து நகர்ந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் வேலைகளைப் பாருங்கள்" என விளாசியுள்ளார். அதாவது வேலைவெட்டி இல்லாமல் தன்னை விமர்சிப்பதை விடுத்து, உங்கள் குடும்பத்துக்காக உழைக்க முயற்சி செய்யுங்கள் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். சமந்தாவின் இந்த டிவீட் இணையத்தில் வைரலாகியுள்ளது.     


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR