பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. சிம்ரன், சூரி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.


சிவகார்த்திகேயன்- பொன்ராம் கூட்டணியில் உருவாகும் 3-வது படமாகும் இது. அக்டோபர் மாதம் சமந்தாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதால், திருமணத்திற்கு முன்பு தனது காட்சிகளை நடித்து கொடுக்கிறார்.