தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 


இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் மகா மீராவிடம் விஷால் உன்னை தான் பொண்ணு பார்க்க வந்திருப்பதாக சொல்லி அவளை அழைக்க மீரா வர மறுக்க ஒரு கட்டத்தில் கோபம் அடையும் மகா மீராவை அடிக்கப் பாய சீதா தடுத்து நிறுத்தினாள். 


சீதா மகா இடையே வாக்குவாதம்


இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் சீதா மகாவை தடுத்து நிறுத்த இவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. மீரா எனக்கு கல்யாணமே வேண்டாம், நான் வரமாட்டேன் என்று சொல்ல மீண்டும் பத்து நிமிஷத்துல வரலனா இந்த மகாவோட உண்மையான முகத்தை பார்க்க வேண்டியது இருக்கும் என மிரட்டி விட்டு செல்கிறாள்.



உள்ளே வந்த மகா விஷால் குடும்பத்தை சமாளித்துக் கொண்டிருக்க இங்கே சீதா நீ போ நேரா விஷாலிடம் பேச வேண்டும் என்று சொல்லி உனக்கும் சத்யனுக்கும் இடையே இருக்கும் காதல், கல்யாணம் முடிவான விஷயம் கல்யாண பத்திரிக்கை இதையெல்லாம் காட்டி பேசு, பிரச்சினையை நாமே எதிர்கொள்ளலாம் என்று சொல்லி அனுப்புகிறாள். 


மேலும் படிக்க | லியோவில் ஜக்கம்மா நடிகை... அதுவும் 20 வருடங்களுக்கு பின் விஜய் உடன்...!


எனக்கு மீரா வேண்டும்: அடம் பிடிக்கும் விஷால்


மீராவும் விஷாலை தனியாக அழைத்துச் சென்று சத்தியன் குறித்த விஷயங்களை சொல்ல இதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும் எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு, நீ எனக்கு வேண்டும் என்று சொல்வது மட்டுமின்றி நீ எனக்கு மூன்றாவது என்று சொல்ல மீரா அதிர்ச்சி அடைந்து நிற்கிறாள். சீதா, துரை என இருவரும் வந்து விஷாலிடம் பேச அப்போதும் அவன் சிரித்துக் கொண்டே எனக்கு மீரா வேண்டும், யார் குறுக்க வந்தாலும் கொன்னுட்டு போயிட்டே இருப்பேன் என்று சொல்கிறான். 


திரும்பவும் இவர்கள் எல்லோரும் உள்ளே வந்த பிறகும் விஷால் மீராவிடம் நீ எனக்கு வேண்டும் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறான். பிறகு சொப்னா ஊருக்கு கிளம்பி விட்டதாக இவர்களுக்கு தகவல் வர அதிர்ச்சி அடைகின்றனர். அப்படினா மீரா கல்யாணம் நடக்காதா என்று துரை கேட்க மீரா சோகத்தோடு ரூமுக்குள் சென்று விடுகிறாள். 


பிளான் போடும் சீதா


மேலும் துரை இதெல்லாம் மகாவோட ஏற்பாடா தான் இருக்கும் என்று சொல்ல சீதா மகாவுக்கு தெரிந்திருந்தால் வீட்டில் பெரிய பஞ்சாயத்து நடந்து இருக்கும், சேதுவோட ஏற்பாடாக இருக்கணும் என்று சொல்கிறாள். என்ன நடந்தாலும் இவர்களது கல்யாணம் நடக்கணும் அதுக்கு ஒரு வழி இருக்கு என சீதா மீராவுக்கு இரண்டு அண்ணன்களோட ஆசிர்வாதம் வேண்டும் சத்தியனுக்கு கல்யாணத்தில் மகா இருக்க வேண்டும். இந்த கண்டிசன்கள் வேண்டாம் என இருவரிடமும் எப்படியாவது பேசி சம்மதிக்க வைத்து விட்டால் இந்த கல்யாணத்தை நடத்திடலாம் என்று பிளானை செல்கிறாள். ராம் நீ மீராவிடம் பேசு, மீரா நீ சொன்னா கண்டிப்பா கேட்பாங்க என்று சொல்ல சீதா மீராவிடம் பேச முடிவு எடுக்கிறாள். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | வசூல் ராஜாவான ஜெயிலர்.. ரூ.600 கோடியை தாண்டிய கலெக்ஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ