தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஒரு வழியாக அஞ்சலியின் கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதிர்ச்சி கொடுக்கும் ராம்


அதாவது ராம் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று சொல்லி பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறான். 


அது மட்டுமல்லாமல் அவனுடைய கிரெடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து வந்து கொட்டி விட்டு ஒரு வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு எனக்கு இந்த கம்பெனி ஷேர் கூட தேவையில்லை என்று சொல்லி சீதாவை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்புகிறான். 


உணர்ச்சிவசப்பட்டு பேசும் மகா


உடனே மகா ராம் மீது இருக்கும் பாசத்தை சொல்லி கண்கலங்கி அவனை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறாள். அக்கா உங்க எல்லாரையும் விட்டுட்டு போன பிறகு நான் உங்கள பாத்துக்கிறேன் எனக்கு குழந்தை எதுவும் வேண்டாம் என்று சொல்லி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இந்த கம்பெனி எல்லாத்தையும் காப்பாத்தி வச்சது எதுக்காக யாருக்காக உங்களுக்காக மட்டும்தான் என்று மகா எமோஷனாக பேச ராமும் எமோஷன் ஆகிறான். 


இதனால் சீதா மற்றும் துரைக்கு ராம் மனம் மாறி விடுவானோ என சந்தேகம் எழுகிறது. ஆனால் நீங்க என் மேல வச்சிருக்க பாசத்தை பத்தி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை எனக்கு அது ரொம்ப நல்லாவே தெரியும் ஆனா நீங்க செஞ்ச இந்த தப்பை என்னால மன்னிக்க முடியாது நான் அவ்வளவு பெரிய மனுஷன் கிடையாது என சொல்லி ஷாக் கொடுக்கிறான். 


மேலும் படிக்க | “எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க..” அநாகரிக செயலுக்கு மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்.!


எல்லோரும் போலீசில் சரண்டர் ஆகணும்: ராம்


மேலும் இனிமே நான் இந்த வீட்ல இருக்கணும்னா சத்தியனை கொல்ல முயற்சி செய்தது நீங்கதானே ஒத்துக்கிட்டு எல்லோரும் போலீசில் சரண்டர் ஆகணும் என்று சொன்ன அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மகாலட்சுமி பதில் எதுவும் பேச முடியாமல் நிற்க அப்படி செய்ய முடியாதுல்ல என்று சொல்லி ராம் சீதாவை கூட்டிக்கொண்டு வெளியே வருகிறான். 


அடுத்து செக்யூரிட்டியில் இவர்களுக்கு உதவி செய்ய கூட வர ஒரு நேர்மையான மக்கள் வசிக்கும் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு பார்க்க சொல்ல செக்யூரிட்டி அவர்களை அழைத்துச் செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | சோனியா அகர்வால் தமிழில் நடிக்கும் அடுத்த படம் இதுதான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ