தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 


இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் ராம் சீதா தப்பு செய்யல, சூர்யாவும் தப்பு செய்யல இந்த வீட்ல இருக்கவங்க தான் யாரோ என்னமோ பண்ணி இருக்காங்க என சொல்ல மகாலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். 


கோவப்படும் மகாலாட்சுமி


இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் சேதுபதி மற்றும் சுபாஷ் இருவரும் வீட்டுக்கு வர ராம் சொன்ன விஷயங்களை சொல்லி மகாலட்சுமி கோபப்படுகிறாள். இருவரும் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைய பிறகு சேதுபதி ராமிடம் சென்று சீதா தப்பு பண்ணி இருக்க மாட்டானு நினைக்கிறியா? அப்படின்னா அவ எதுக்கு ஜெயிலுக்கு போகணும் என கேள்வி கேட்க ராம் சீதா தப்பு பண்ணி இருக்க மாட்டா என தன்னுடைய அப்பாவை எதிர்த்து பேசுகிறான். 


அது மட்டுமல்லாமல் சீதாவை பார்த்தால் தப்பு பண்ற பொண்ணு மாதிரியா இருக்கு உங்க மனசாட்சியை தொட்டு சத்தியம் பண்ணுங்க என்று கேட்க சேதுபதி சத்தியம் செய்ய முடியாமல் தடுமாறி நிற்க மகாலட்சுமி யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிற? அவர் எவ்வளவு பெரிய மனுஷன் தெரியுமா? என் அக்கா லட்சுமி இறந்தபோது கல்யாணமே பண்ணிக்க மாட்டேனே இருக்காது உங்களுக்காகத்தான் அவர் என்கிட்ட வந்து கேட்டாரு, நான் இன்னொரு குழந்தை பெத்துக்க மாட்டேன் என்று சொன்ன பிறகுதான் அவர் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாரு அப்படிப்பட்ட மனுஷனை இப்படி அவமானப்படுத்துற என கோபப்பட்டு கூட்டத்தை கலைக்கிறார். 


மேலும் படிக்க | ‘ஜவான்’ படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியீடு..! படத்தில் விஜய் இருக்கிறாரா..?


அதன் பிறகு துரை ராமிடம் வந்து நீ சரியான வழியில் தான் போயிட்டு இருக்க, என் அக்கா லட்சுமி கிட்ட இருந்த உண்மை உன் கிட்ட இருக்கு ஆனா அது மகாலட்சுமி கிட்ட கிடையாது, நீ யாருக்காகவும் உன்னுடைய மனசை மாத்திக்காத என்று சொல்கிறார்.


சீதாவை சந்திக்க வரும் மகாலட்சுமி, அர்ச்சனா


அதனைத் தொடர்ந்து மகாலட்சுமி மற்றும் அர்ச்சனா இருவரும் சீதாவை சந்திக்க வர சீதாவுடன் இருக்கும் பெண்மணி நீ உடனடியா போகாத அவங்க கொஞ்ச நேரம் காத்திருக்கட்டும் என்று சொல்ல சீதாவை அப்படியே செய்ய இங்கே மகாவும் அர்ச்சனாவும் கடுப்பாகின்றனர்.



அர்ச்சனா நாம எதுக்கு அவளுக்காக காத்திருக்கணும் வா போகலாம் என்று சொல்ல மகா எனக்கு அவளை ஜெயிலுக்குள் பாக்கணும் என்று காத்திருக்கிறாள். 



நேருக்கு நேர் சந்திக்கும் சீதா, மகா


அதன் பிறகு கொஞ்ச நேரத்தில் சீதா வெளியே வர மகா மற்றும் சீதா இருவரும் நேருக்கு நேராக சந்தித்துக் கொள்கின்றனர். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | உடல் எடையை குறைத்து மாஸ் காட்டும் ஜோஜு ஜார்ஜ்! ஆண்டனி ஃபர்ஸ்ட் லுக்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ